tamilnadu

img

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த குட்டிகளை காண சிறப்பு ஏற்பாடு

தாம்பரம், ஜன. 16- அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிறந்ததொரு வன உயி ரின இனப்பெருக்க மையமாகத் திகழ்கிறது.  பூங்காவில் உள்ள இந்திய காட்டு  மாடு ராகுல் மற்றும் ரீமா என்ற இணை  சமீபத்தில் ஒரு பெண் குட்டியை ஈன்றது. தற்சமயம் உயிரியல் பூங்கா வில் 24 காட்டு மாடுகள் உள்ளன.  இவை அருகருகே உள்ள இரு  இருப்பிடங்களில் பார்வையாளர்க ளுக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவின் பெரும் குளம்பினம் மற்றும் இந்திய கண்டத்தில் மட்டுமே காணப்படும் நீலமான் மிகச்சிறந்த முறையில் இங்கு இனப்பெருக்கம் செய்து வருகின்றன. நீல மான் இணை சமீபத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. தற்சமயம் பூங்காவில்11 நீல மான்கள் உள்ளன. பூங்காவில் இந்திய பழுப்பு நிற  ஓநாயும் சிறந்த முறையில் இனப் பெருக்கம் செய்கின்றன. கீர்த்தி மற்றும் வசந்தன் இணை ஒநாய்கள் சமீபத்தில் 4 ஆண் மற்றும் 3 பெண்  குட்டிகள் என மொத்தம் 7 குட்டிகளை  ஈன்றது. இந்த இணை இத்துடன் மூன்றாவது முறையாக குட்டிகளை வெற்றிகரமாக ஈன்றுள்ளது. புதிதாக பிறந்துள்ள குட்டிகளை தொடர் மருத்துவ கண்காணிப்பில் நல்ல முறையில் பாரமரிக்கப்பட்டு வரப்படுகின்றன. காணும் பொங்கல் நாளில் பல விதமான சிறப்பு ஏற்பாடுகள் பார்வை யாளர்களை மகிழ்விக்க பூங்கா நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையா ளர்கள் பிறந்த குட்டிகளை பெரிய எல்.இ.டி. மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.