tamilnadu

img

ரயில் நிலையங்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி....

சென்னை:
பயன்படுத்தாத ரயில் நிலையங்களில் 67 மெகாவாட் திறனுக்கு சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கரியமில வாயு வெளியேற் றத்தைக் குறைத்து தொடர் வண்டி போக்குவரத்தை பசுமையாக்கும் வகையில், நடப்பு நிதியாண்டில் 270 கிலோ மீட்டர் தொலைவிலான வழித்தடத்தை மின் வழித்தடமாக்க தென்னக ரயில்வே இலக்கு நிர்ணயித்துள் ளது. அதன்படி, தென்னக ரயில்வே சார்பாக 4.74 மெகாவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம், காட்பாடி, தாம்பரம், மாம்பலம், கிண்டி, செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களிலும், மதுரை, திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்திலும், திருச்சி பொன்மலை பணிமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூரிய ஒளி மின் உற்பத்தித் தகடுகள் இதற்காக பொருத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.மேலும், கூடுதலாக 2.69 மெகாவாட் அளவுக்கு கூரைகள் மீது சூரிய ஒளி மின் உற் பத்தித் தகடுகள் பதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்தப் பணியை பெரம்பூரைச் சேர்ந்த நிறுவனமும், திருச்சி பொன்மலை தொழிற்சாலையும் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.அதேபோல், பயன்படுத்தாத ரயில் நிலையங்களில் 67 மெகாவாட் திறனுக்கு சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக 300 ஏக்கர் காலி நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற் கான ஒப்பந்தம், ரயில்வே எரிசக்தி மேலாண் நிறுவனம் சார்பில் விடுக்கப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

ரயில்வே வசம் 10.5 மெகாவாட் திறனுக்கு காற்றாலை நிலையம் 
தண்டவாளங்கள் அருகே 160 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில், இதற்கானஒப்பந்தம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. தற்போது, ஒட்டுமொத்தமாக தெற்கு ரயில்வே வசம் 10.5 மெகா வாட் திறனுக்கு காற்றாலை நிலையம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்ததால் கடந்த நிதியாண்டில் 16.64 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

;