சென்னை,பிப்.6- மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் வடசென்னையில் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மத்திய பட்ஜெட்டில் சமூக நலத்துறைக்கு ஒதுக்கவேண்டிய நிதியை வெட்டியதை கண்டித்து சென்னை எழும்பூர் திட்டம் 5 மற்றும் 70 அடிசாலை திட்டம் 6 ஆகிய அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மணிமாலை தலைமை தாங்கினார். திருவொற்றியூர் திட்டம் 13ல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ருக்மணி தலைமை தாங்கினார். திருவிக நகர் திட்டம் 7 மற்றும் காசிமேடு திட்டம்1ல் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் நிர்மலா தலைமை தாங்கினார். வியாசர்பாடி பிவிகாலனி திட்டம் 12 அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தேவி பிரசன்னா தலைமை தாங்கினார்.