அரசுப் பள்ளிகளில் சமூக நீதிப் பாடல்
சென்னை,ஜன.10- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இறைவணக்கம் நிகழ்ச்சி முடிந்ததும், சமூக நீதிப் பாடல் ஒலிபரப்பப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செயல்முறைகள் குறித்து சுற்றறிக்கை விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப் படும் என்று அவர் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளில் சமூக நீதி பாடலை ஒலிபரப்ப வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மை யில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அண்மையில் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக் கும் விழுதுகள் என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதய நிதி, பள்ளிக் கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட சமூக நீதி உள்ளிட்ட பத்துப் பாடல்கள் அடங்கிய குறுந்த கடை வெளியிட்டார். அப்போது, இந்தப் பத்துப் பாடல்களில் சமூக நீதியை வலியுறுத்தும் பாடல் இறைவணக்கத்திற்குப் பிறகு பாடிவிட்டு மாணவர்கள் தங்கள் வகுப்பு களுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், அமைச்சர் உதய நிதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இனி வரும் காலங்களில் அரசுப் பள்ளி களில் காலை இறை வணக்கம் நிகழ்வின் போது சமூக நீதி பாடல் பாடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை: பயனாளிகள் மகிழ்ச்சி!
சென்னை, ஜன.10- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலை யில் பொங்கல் திருநாளை முன்னிட்டு முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள் ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது என்பதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற பெய ரில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பெண்கள் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மாதம் 14 மற்றும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் முன்கூட்டியே அதாவது ஜன வரி 10ஆம் தேதியே மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.