tamilnadu

img

ஆந்திராவிற்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

ராணிப்பேட்டை,  ஜூன் 12- ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக காஞ்சிபுரத்திலிருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி சோதனை நடத்தினர். சோதனையில் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து லாரியில் இருந்த செல்லமுத்து (24), சந்தோஷ் (26) ஆகிய இருவரையும் வாலாஜாப்பேட்டை காவல் துறையினர் கைது செய்து,  அரிசி மற்றும் லாரியை  பறிமுதல் செய்தனர்.

;