பண்ருட்டி ஒன்றியம் ராயர்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற எஸ்.கே. குணசுந்தரி திங்களன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.உதயகுமார், ஒன்றியச் செயலாளர் கே.தனபால், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.ஏழுமலை, நகரச் செயலாளர் ஆர்.உத்திராபதி, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். பதவி ஏற்றவுடன் எஸ்.கே. குணசுந்தரி ராயர்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களிடம் பள்ளி வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.