மெரினாவில் தற்கொலைக்கு முயன்ற சகோதரிகள் மீட்பு'
சென்னை, மார்ச் 31- சென்னை மெரினாவில் கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற அக்கா-தங்கையை போலீசார் மீட்டனர். மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் நடைபாதை அருகே இரு இளம் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை வேகமாக நடந்து சென்றனர். அவர்கள் கடற்கரையோரம் சென்றதும் திடீரென, கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கடலில் குதித்து இருவரையும் மீட்டனர். பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் சகோதரிகள் என்பதும், ஒருவர் பட்டப்படிப்பு படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதும், அவரது தங்கை எழும்பூரில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், பெற்றோர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதை அறிந்து இருவரும் தற்கொலைக்கு முயன்றிருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், இருவருக்கும் அறிவுரை வழங்கியும், எச்சரித்தும் அவர்களது குடும்பத்தினரிடம் அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுடர் பயணத்திற்கு வரவேற்பு
விழுப்புரம், மார்ச் 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 வது மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி,சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நினைவு சுடர்ப் பயண குழு சென்னையி லிருந்து புறப்பட்டு மதுரை செல்கிறது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி,மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.வாலண்டினா, எஸ்.நம்பு ராஜன், எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான பயணக்குழுவுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திண்டிவனம் மேம்பாலம் அருகில் வட்டச் செயலாளர் ஏ.கண்ண தாசன் தலைமையிலும் மயிலத்தில் ஒன்றியச் செயலாளர் டி. கஜமூர்த்தி, விழுப்புரத்தில் வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். வரவேற்புக் குழுத் தலைவர் ஆர்.ராம மூர்த்தி, கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா, தமிழ்நாடு பார் கவுன்சிலர் உறுப்பினர் எ.கோதண்டம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார்,வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, ஜி.ராஜேந்திரன், ஆர்டி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எ.கிருஷ்ணமூர்த்தி,பி.சிவராமன், எஸ் .பிரகாஷ்,வட்டச் செய லாளர் எஸ்.கணபதி, ஒன்றிய செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மயான பூமிக்கு மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், பச்சூர் பழையப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அதே ஊரில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தை பல ஆண்டுகளாக மயான பூமியாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலை யில் அதே பகுதியைச் சேர்ந்த ஆக்கிர மிப்பாளர் ஒருவர் இந்த இடத்தை சுடு காடாக பயன்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரி வித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சுடுகாட்டை பயன்படுத்தக் கூடாது தடை என முதலில் நீதிமன்றம் உத்தரவு என்றும், பின் மாவட்ட ஆட்சியர் உத்தரவு என விளம்பர பலகை வைத்தனர். ஆனால் சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டு வழங்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் ஆகி யோரிடம் மனு கொடுத்து 50 நாட்களாகி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து கடந்த மார்ச் 25 அன்று சிபிஎம் சார்பில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் ஒரு வார காலத்திற்குள் அதே ஊரில் வேறு இடம் வழங்குவதாக வட்டாட்சியர் உறுதி யளித்தார். இந்நிலையில் மார்ச் 30 அன்று அதே ஊரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்ததை அடுத்து உறவினர்கள் அவரது உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது வருவாய் அதி காரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் பழைய பேட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். இந்த தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, வருவாய் அலுவலர் ராஜேஷ் ஆகியோர் சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.காம ராஜ், நிர்வாகிகள் சி.கேசவன், வி.சிங்காரம் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வரும் ஏப்ரல் 2 க்குள் மாற்று இடம் தேர்வு செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து இறந்தவரின் உடலை அவரது சொந்த நிலத்தில் அடக்கம் செய்த னர். பேச்சுவார்த்தையின் போது சிபிஎம் நிர்வாகிகள் வெங்கடேசன், கோவிந்தன், வீரபத்திரன், ஆனந்தன் உடனிருந்தனர்.