tamilnadu

ஒற்றை கைபேசி செயலி

 சென்னை, ஜூலை 11- அரசு சேவைகள் அனைத்தையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘ஒற்றை கைபேசி செயலி’ அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் கூறினார். தமது துறை மானியத்தின் மீது புதிய அறிவிப்புகளை வெளியிட்ட  அவர், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் tn.gov.in என்ற தளப்பெயருடன் மின்னஞ்சல் உருவாக்கித் தரப்படும். தமிழ்நாடு அரசின் ஒற்றை மின்னணு கட்டண செலுத்தும் தளம் உருவாக்கப்படும் என்றார்.  நம்பிக்கை இணையம் (பிளாக்செயின்), செயற்கை நுண்ணறிவு (ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ்), இயந்திரக்கற்றல் (மெஷின் லேர்னிங்),  பொருட்களின் இணையம் (ஐஓடி), மெய்நிகர் உண்மை (விர்ச்சுவல் ரியாலிட்டி), மிகை நிகர் உண்மை (ஆகியுமெண்டட் ரியாலிட்டி), ஆளில்லா குறுவிமானங்கள் (ட்ரோன்ஸ்), தரவு பகுப்பாய்வு (டேட்டா அனாலிட்டிக்), போன்றவற்றிற்கான கொள்கைகள் உருவாக்கப்படும். குரல் மூலம் தொலைக்காட்சி சேனல்கள் மாற்றுதல், வீட்டு மின்னாற்றல்,  மின்னணுவியல் உபகரணங்களை கட்டுப்படுத்தும் வகையில் மேல மர்வு (செட்ஆப்பாக்ஸ்) அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர்தமது அறிவிப்பில் கூறினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தமது அறி விப்பில், வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்  கீழ் பயன்பெற வருமான உச்சவரம்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து 72 ஆயிர மாக உயர்த்தப்படும் என்றார்.