tamilnadu

img

சிங்காரம்பிள்ளை பள்ளியை அரசே ஏற்று நடத்தக்கோரி இன்று பிரச்சார இயக்கம்.... கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்....

சென்னை:
சிங்காரம்பிள்ளை பள்ளியை அரசே ஏற்று  நடத்தக்கோரி நவம்பர் 11 அன்று நடைபெறும் பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.

இதுகுறித்து கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் இடத்தை சட்டவிரோத மாக விற்பனை செய்துள்ளனர். பள்ளி கட்டிடங்களை இடித்து வணிக வளாகம், காய்கறிகடை, ஹோட்டல் ஆகியவற்றை அரசின் அனுமதி பெறாமல் கட்டியுள்ளனர்.அரசு விதிமுறைகளுக்கு மாறாக அரசு உதவி பெறும் பள்ளியை விற்பனை செய்ததைக் கண்டித்தும், பள்ளியை விற்பதற்கு காரணமாக இருந்த நிர்வாகக் குழுவை கலைத்து, அப்பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரியும் வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை பள்ளி வளாகத்திலிருந்து நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் வரை பிரச்சாரஇயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.இப்பிரச்சார நடைபயண இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பள்ளி வளாகத்தில் காலை 9 மணிக்கு துவக்கிவைக்கிறார்.மாநிலச் செயற்குழு உறுப்பினர்  கே.கனகராஜ் பங்கேற்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.