tamilnadu

மாசு கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றாததால்   ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது தமிழக அரசு விளக்கம்

 சென்னை,ஜன.9- தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை தொட ர்ந்து பின்பற்ற மறுத்ததன் காரண மாகவே, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் மக்களுக் கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய வேதாந்தா குழு மத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய ஆவேச போராட்டத்திற்குப் பின் னர் தமிழக அரசு இந்த ஆலை யை சீல் வைத்து மூடியது.  இப்போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுணன் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை நடைபெற்றது.  அப்போது தமிழக அரசு தரப்பில் கூறுகையில், மக்க ளுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுத்ததாக தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் கூறுகையில், மீண்டும் ஆலையை திறக்க உத்தரவிட்டால் அனைத்து விதிகளையும் பின்பற்றுவதாகவும், கூடுதல் கட்டுப்பாடு விதித்தால் அதை பின்பற்றவும் தயாராக உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதி கள் ஒத்திவைத்தனர்.

;