tamilnadu

img

ரேசன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு

சென்னை, ஆக. 20 - பருப்பு, சமையல் எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொரு ட்களின் தட்டுப்பாட்டை சரி செய்யக் கோரி செவ்வாயன்று (ஆக.20) நியாய விலைக் கடைகள் முன்பு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில், கோதுமை தட்டுப்பாடு நிலவு கிறது. மாதந்தோறும் வழங்க வேண்டிய இந்த பொருட்களை முறையாக கிடை க்காததால் பொதுச் சந்தையில் வாங்க வேண்டி உள்ளது. மேலும், நியாய விலைக் கடைக்கு பலமுறை அலைய வேண்டி உள்ளது.

3 மாதங்களாக நிலவும் இந்த தட்டுப்பாட்டை சரி செய்யக் கோரி தென்சென்னையில் நியாய விலை கடை கள் முன்பு பல்வேறு இடங்களில் அனை த்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அத்தியா வசியப் பொருட்கள் அனைத்தையும் தடையின்றி வழங்க வேண்டும், பொது விநியோக முறைகள் சீர்படுத்த வேண்டும், கடை செயல்படும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்,

மண்ணெண்ணெய் வழங்கும் அளவை அதிகரித்து, மாதந்தோறும்  வேண்டும், பண்டிகை காலங்களில் அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்க வேண்டும், பயோ மெட்ரிக் முறையில் உள்ள குளறுபடி களை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங் களாக எழுப்பினர்.

மதுரவாயல் பகுதி முகப்பேர் மேற்கு 4வது பிளாக், 7வது பிளாக் ஆகிய இடங்களில் நியாய விலைக் கடைகள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தென் சென்னை மாவட்டத் தலை வர் எஸ்.சரவண செல்வி, பகுதிச் செய லாளர் சித்ரா உள்ளிட்டோர் பேசினர்.

சைதாப்பேட்டை பகுதி ஜோதியம் மாள் நகர் கடை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலி யட் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.