tamilnadu

அதானி ஊழலில் அதிமுக பங்கா?

சென்னை, ஜூலை 3 - அதிமுக ஆட்சிக் காலத்தின் போது, தமிழக மின்வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில், அதானி குழுமம் ரூ. 6 ஆயி ரம் கோடி அளவிற்கு ஊழல் செய்திருப்பதாக அண்மை யில் வெளியான ஆதாரங் களின் அடிப்படையில், தமி ழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் துவங்கி யுள்ளது.

அதிமுக ஆட்சியின் போது, அதானி குழுமத்தி டம் இருந்து நிலக்கரி வாங்கி யதில் ரூ. 6 ஆயிரம் கோடி  அளவிற்கு ஊழல் நடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே, கடந்த 2024 மே மாதம், திட்டமிட்டு செய்யப்படும் குற்றங்கள், ஊழலை அம்பலப்படுத்தும் அமைப்பான ‘ஓசிசிஆர்பி’ (OCCRP)-யின்  ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

குற்றச்சாட்டு என்ன?

அந்த விபரங்களின் படி, இந்தோனேஷியா விலிருந்து குறைவான எரி திறன் கொண்ட நிலக்கரி யைக் கொள்முதல் செய்து அதனை அதிகமான எரி திறன் கொண்ட நிலக்கரி யாக காட்டி அதிக விலைக்கு அதானி குழுமம் தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்றுள் ளது என்பது தான் குற்றச் சாட்டு. 2014 முதல் 2016 வரை அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இந்த இறக்குமதிகளில் மின்வாரியத்துக்கு சுமார் ரூ 6,000 கோடி இழப்பு ஏற் பட்டுள்ளது என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த இறக்கு மதிகள் எப்படி நடத்தப் பட்டன என்பதையும் இதற் கான கொள்முதல் ஆவ ணங்கள் எப்படி தயாரிக்கப் பட்டன என்பதையும் தற்சம யம் புதிய தகவல்கள் வெளிப் படுத்துகின்றன.

ஆவணங்களில் தகிடுதத்தம்

இந்தோனேஷியா விலிருந்து நிலக்கரி நேரடி யாக எண்ணூர் துறை முகத்துக்கு கப்பலில் வந்து ள்ளது. ஆனால், வரி ஏய்ப்புக் காக, இந்தோனேஷியா விலிருந்து- அதானியின் வரு மான வரி ஏமாற்ற வங்கி  கணக்குகள் செயல்படுத்தப் படும் பிரிட்டிஷ் விர்ஜின்  தீவுகளுக்கும், பின்னர்  அங்கிருந்து சிங்கப்பூரு க்கும், பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு மின்வாரியத்துக் கும் வந்து சேர்ந்தது போல, இன்வாய்ஸ் உள்ளிட்ட கொள்முதல் ஆவணங்கள் மோசடியாக மாற்றப்பட்டு உள்ளன. நிலக்கரி கப்பல் இந்தோனேஷியாவி லிருந்து நேரடியாக எண்ணூ ருக்கே வந்த நிலையில், கொள்முதல் ஆவணங்  களுக்கு ஏன் இந்த சுற்றுவட்ட பயணம்? இங்குதான் முறைகேட்டுக்கான திட்டம் போடப்பட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரி

நிலக்கரிக்கான கொள்முதல் ஆணையை தமிழ்நாடு மின்வாரியம் செயல்படுத்திய பொழுது நிலக்கரியின் எரிதிறன் சக்தி 6000 கிலோ கலோரியாக (1 கிலோவுக்கு) இருக்க வேண்டும் என நிபந்தனை போடப்பட்டது. 6000 கிலோ கலோரி என்பது உயர்ந்த தரம் கொண்ட நிலக்கரி. ஜான்லின் எனும் நிலக்கரி சுரங்க குழுமம்தான் இந்தோ னேஷியாவிலிருந்து நிலக்கரியை மின்வாரி யத்துக்கு ஏற்றுமதி செய் தது. ஜான்லின் நிறுவனத்தின் இன்வாய்ஸ் ஆவணம் நிலக்கரியின் விலை ஒரு டன்னுக்கு 28 அமெரிக்க டாலர் என குறிப்பிடுகிறது. ஆனால் அந்த ஆவண த்தில் நிலக்கரியின் எரிதிறன் பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்லை. எனினும் 28 டாலர் விலை எனில் அது குறைந்த எரி திறனையே கொண்டிருக்க இயலும். மேலும் ஜான்லின் சுரங்கத் தில் உற்பத்தி செய்யப் படும் நிலக்கரி, அடிப்படை யிலேயே குறைந்த எரிதிறன் கொண்டது தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

உள்ளே வந்த அதானி நிறுவனம்

ஜான்லின் நிறுவனத்தின்  இன்வாய்சில் விற்பனையா ளர் ஜான்லின் எனவும் வாங்குபவர் டான்ஜெட்கோ (த.நா. மின்வாரியம்) என வும் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த ஆவணம் நேரடியாக த.நா.மின் வாரியத்துக்கு வர வில்லை. மாறாக “சுப்ரீம் யூனியன் இன்வெஸ்டர்ஸ் லிமிடெட்” எனும் நிறு வனத்துக்கு செல்கிறது. இந்த நிறுவனம் வரி ஏமாற்ற கணக்குகளை தொட ங்கும் வங்கிகள் நிறைந்த “பிரிட்டன் வெர்ஜின் தீவுகள்” எனும் தேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்த நிறுவனத்துக்கு ஆவணங்கள் செல்ல வெண்டும்?

“சுப்ரீம் யூனியன் இன் வெஸ்டர்ஸ் லிமிடெட்” எனும் 

இந்த நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள “அதானி  குளோபல் பிடிஈ” எனும் நிறுவனத்துக்கு இன்வாய்ஸ் தருகிறது. இந்த இன்வாய்சில் நிலக்கரி விலை ஒரு டன்னுக்கு 33.75 அமெரிக்க  டாலர் என குறிப்பிடப்படுகிறது. ஏன் 28 டாலர் திடீரென 33.75 டாலராக உயர்கிறது? இதுவும் புதிர். மேலும் முக்கியமாக இந்த இன்வாய்சில் நிலக்கரியின் எரிதிறன் 3500 கிலோ கலோரி என குறிப்பிடப்படுகிறது. இது குறைந்த எரிதிறன் கொண்ட நிலக்கரியே என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது.

68 டாலர் விலை உயர்வு

பின்னர், சிங்கப்பூரில் உள்ள அதானி குளோபல் நிறுவனம் த.நா. மின்வாரியத்துக்கு இன்வாய்ஸ் தருகிறது. இதில் திடீரென நிலக்கரி யின் விலை டன்னுக்கு 91.91 அமெரிக்க டாலராக உயர்த்தப்படுகிறது. அது மட்டுமல்ல;  நிலக்கரியின் எரிதிறன் 6000 கிலோ கலோரி யாக- அதாவது, உயர்தரம் கொண்ட நிலக்கரி  என குறிப்பிடப்படுகிறது.

இன்வாய்ஸ் உட்பட கொள்முதல் ஆவணங்கள் முதலில் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் சென்று  த.நா.மின் வாரியத்துக்கு வரும் பொழுது, விலை  டன்னுக்கு 63.91 டாலர் உயர்கிறது. மேலும்  நிலக்கரியின் எரிதிறன் 3500 கி. கலோரியி லிருந்து 6000 கி.கலோரியாக உயர்கிறது. 

ஊர் சுற்றிய ஆவணங்கள்

நிலக்கரிக் கப்பல் நேரடியாக இந்தோனேஷி யாவிலிருந்து எண்ணூருக்கு வரும் பொழுது ஆவணங்கள் மட்டும் ஏன் சுற்று வட்டப்பாதை யில் பயணிக்க வேண்டும்? அந்த பயணத்தின் பொழுது ஏன் விலை மூன்று மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட வேண்டும்? எரிதிறன் சக்தியும் ஏன் பொய்யாக மாற்றப்பட வேண்டும்? இந்த கேள்விகளுக்கான பதில்களில்தான் முறைகேட்டின் சூட்சுமம் அடங்கியுள்ளது.

இப்படி சுமார் குறைந்தபட்சம் 25 கப்பல்கள் த.நா. மின்வாரியத்துக்கு நிலக்கரியை சுமந்து வந்துள்ளன. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரியின் மொத்த எடை 1.2 கோடி டன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்  விளைவாக தமிழ்நாடு மின் வாரியம் குறைந்த பட்சம் ரூ. 6000 கோடி இழந்துள்ளது. 

திறமையின்மையா? ஊழலில் கூட்டா?

இந்த கொள்முதல்கள் நடந்த பொழுது அஇஅதிமுக ஆட்சியில் இருந்தது. மின்வாரி யத்துக்கு 6000 கோடி இழப்பு எனில் என்ன  பொருள்? இந்த இழப்பின் சுமை தமிழ்நாடு அரசாங்கத்தின் நிதியில் ஏற்றப்படுகிறது அதாவது மக்களின் தலையில் திணிக்கப்படு கிறது என பொருள். 

3500 கி. கலோரிக்கும் 6000 கி.கலோரிக்கும் எரிதிறனில் உள்ள வேறுபாடு என்பதன் பொருள் என்ன? ஒரு குறிப்பிட்ட யூனிட் மின்சாரம் உற்பத்தி  செய்ய பயன்படுத்த வேண்டிய நிலக்கரியின் அளவு அதிகமாக்கப்பட வேண்டும் என பொருள். உதாரணத்துக்கு 6000 கி. கலோரி கொண்ட ஒரு டன் நிலக்கரி மூலம் 100 யூனிட்டுகள் உற்பத்தி  செய்ய முடியும், எனில் இதே 100 யூனிட்டை 3500 கி.கலோரி நிலக்கரி மூலம் உற்பத்தி செய்ய  ஒன்றரை அல்லது இரு டன் நிலக்கரி தேவைப்பட லாம். மேலும் குறைந்த எரிதிறன் கொண்ட  நிலக்கரி கூடுதலாக சாம்பலை உள்ளடக்கி யிருப்பதால் அதிகமாக காற்று மாசுபாட்டை  விளைவிக்கும். இது மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தான் நடந்ததா?

இந்த முறைகேடுகள் நடந்தபொழுது ஜெய லலிதா அம்மையார் முதல்வராக இருந்தார். ஜெயலலிதா மிகவும் திறமை வாய்ந்தவர் என வும் எந்த தவறும் அவரின் கண்களிலிருந்து தப்ப முடியாது எனவும் அதிமுகவினர் பெருமைப்பட்டுக் கொள்வது உண்டு. இந்த மெகா முறைகேடு அவரது கண்களில் பட்டதா? என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? இந்த கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை.

திருடனுக்கே போலீஸ் வேலை

கொள்முதல் செய்யப்படும் நிலக்கரியின் எரிதிறன் மின்வாரியத்தின் நிபந்தனையை பூர்த்தி செய்கிறதா என்பதை பரிசோதித்து பார்ப்பது மிக அவசியம். இதற்காக ஒவ்வொரு கப்பலில் வரும் நிலக்கரியிலும் மாதிரிகளை தேர்ந்தெடுத்து பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு  செய்வது அவசியம். ஆய்வு முடிவுகள் திருப்தி கரமாக இருந்தால் மட்டுமே அதற்கான பணம் தரப்பட வேண்டும். அஇஅதிமுக ஆட்சியின் தமிழ்நாடு மின்வாரியம் இதனை செய்ததா? செய்தது. ஆனால் எப்படியென்றால், நிலக்கரி யின் மாதிரிகளை ஆய்வு செய்யும் பொறுப் பையே அதானியிடம் கொடுத்துவிட்டது.

திருடனிடமே அந்த குற்றத்தை விசாரிக்கும்  காவல்துறை பொறுப்பையும் நீதி வழங்கும் நீதித்துறை பொறுப்பையும் ஒப்படைப்பது போல இது உள்ளது. 

தணிக்கை ஆணையக் கேள்வி

இதே காலகட்டத்தில் தமிழ்நாடு காகித நிறு வனமும் நிலக்கரியை இறக்குமதி செய்தது. காகித நிறுவனம் கொள்முதல் செய்த நிலக்கரி விலை குறைவாக இருந்தது மட்டுமல்ல; தர ஆய்வும் சுயேச்சையான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை ஏன் மின்வாரியம் செய்யவில்லை என தணிக்கை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இதற்கிடையே அஇஅதிமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் டன் நிலக்கரி காணாமல் போய்விட் டது எனும் பகீர் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 

இவற்றைக் கூர்ந்து ஆய்வு செய்தால் அஇஅதிமுக ஆட்சி, நிலக்கரி கொள்முதலில் மிகவும் திறமையற்று செயல்பட்டிருக்க வேண்டும்; அல்லது முறைகேட்டில் பங்குதார ராக இருக்க வேண்டும் எனும் முடிவுக்குதான் வரவேண்டியிருக்கும். இதில் எது உண்மை என்பதை தமிழ்நாடு அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்புத் துறையின் விசாரணை வெளியில் கொண்டுவர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சமூக இயக்கங்களும் வலியுறுத்தியுள்ளன.

இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை துவக்கி யுள்ளது. இந்த விசாரணையை இரண்டு மாதங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்யு மாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

தொகுப்பு : அ.அன்வர் உசேன்