tamilnadu

சிக்கனில் புழுக்கள் சாப்பிட்டவர்கள் அதிர்ச்சி

சென்னை,அக்.15- சென்னை திருநின்றவூரில் செயல்பட்டு வரும் 99 டிகிரி ஃபாரன்`ஹீட் உணவகம் ஒன்றில் பரிமாறப்பட்ட சிக்கனில் புழுக்கள் இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் ஆவடி அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் 99 டிகிரி ஃபாரன்ஹீட் உணவகத்திற்கு 13 ஆம் தேதி அன்று இரவு ஒரு குடும்பத்தினர் பிரியாணி சாப்பிடச் சென்ற னர். சிலர் சிக்கன் பிரியாணியை முழுவதும் சாப்பிட்டு முடித்து விட்டு அமர்ந்திருக்க, சிலர் அப்போது தான் சிக்கனை பிளந்து உண்ணத் தயாராயினர். அப்போது சிக்கனில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கெனவே சிக்கனை ருசித்து உண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்தே போயினர். இதுதொடர்பாக உணவக ஊழியர்களிடம் கேட்ட போது, வேறு சிக்கன் கொண்டு வருவ தாகக் கூறவே ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற வாடிக்கையாளர்கள், புழு கிடந்த சிக்கனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப் வாயிலாக உணவுப்பாது காப்புத்துறைக்கு புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து அந்த உணவகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இச்சம்பவம் குறித்து உணவக நிர்வாகியிடம் கேட்ட போது, கே.சி.சிக்கன் என்ற கடையில் இறைச்சி வாங்கியதாகவும், அந்தக் கடை யின் உரிமையாளர் மீது தான் தவறு உள்ள தாகவும் குற்றம்சாட்டினார். மேலும் அவர் மீது திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தற்போது இறைச்சி கடை உரிமையாளர் தலை மறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஒருவர் மேல் ஒருவர் பழி போட்டு கொண்டு இருக்கும் நிலையில் இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான் என்பதை கருத்தில் கொண்டு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாய் உள்ளது.