சென்னை, மே 11- பெண் காவலர்களை அவதூ றாக பேசிய வழக்கில் கைது செய் யப்பட்டு கோவை மத்தியச் சிறை யில் அடைக்கப்பட்டுள்ள யூடியூப் பர் ‘சவுக்கு’ சங்கர் மீது, சென்னை சைபர் கிரைம் காவல்துறையின ரும் மூன்று வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
அதனடிப்படையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி கோதண்ட ராஜ் முன்பு, சனிக்கிழமையன்று ‘சவுக்கு’ சங்கர் ஆஜர்படுத்தப்பட் டார். அப்போது சங்கரிடம் கிட்டத் தட்ட 4 மணி நேரம் நீதிபதி விசா ரணை நடத்தினார். பின்னர் கோவை க்கு அவரை பலத்த போலீஸ் பாது காப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் விஜயராகவன், செய் தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, “இனி யூடியூப்பில் இது போன்ற கருத்துக்களை தெரி விக்க மாட்டேன், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் கருத்துக் களை பதிவிட மாட்டேன் என நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் தெரிவித்துள் ளார். மேலும் சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான தேதி இன்னும் குறிப்பிடாமல் உள்ளது” என்று தெரிவித்தார்.
10 மணி நேர சோதனை
இதற்கிடையே, சென்னை மதுர வாயல் பகுதியில் உள்ள சவுக்கு சங்கர் இல்லம் மற்றும் தியாகராய நகர் பகுதியில் உள்ள அவரது அலு வலகத்தில் தேனி மாவட்டம், பழனி செட்டிபட்டி காவல் நிலைய ஆய் வாளர் பார்த்திபன் தலைமையி லான குழுவினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சவுக்கு சங்கர் தங்கி யிருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்தி ருந்ததாக வழக்குப்பதிவு செய் யப்பட்ட நிலையில், அது தொடர் பாக இந்த சோதனை நடத்தப்படு வதாக போலீசார் தரப்பில் கூறப் பட்டது.
மீண்டும் கஞ்சா பறிமுதல்?
சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போலீ சார் சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த சோதனையில் மதுரவாயலில் உள்ள சவுக்கு சங் கர் வீட்டிலிருந்து ரூ.2 லட்சம் ரொக் கம், செல்போன், லேப்டாப், கஞ்சா அடங்கிய சிகரெட் உள்ளிட்டவை கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் தியாகராய நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலி ருந்து லேப்டாப்கள், ஹார்டிஸ்க் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த போலீசார், சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகம் இரண் டிற்கும் சீல் வைத்து விட்டுச் சென் றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே சவுக்கு சங்கர் மீது பெண்களை அவதூறாக பேசி யது, கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்துள்ள நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலை யம் தொடர்பான வழக்கிலும் சவுக்கு சங்கருக்கு மே 24 வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை எழும் பூர் நீதிமன்ற முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப் பிடத்தக்கது.