tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது

திருநெல்வேலி, ஜூலை 11- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்  புரையின் போது, முன்னாள் முதல மைச்சர் கருணாநிதி குறித்து நாம் தமி ழர் கட்சியின் நிர்  வாகி சாட்டை துரை முருகன் அவதூறான கருத்துக்களை பேசினார். இதுகுறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பொது அமைதியை சீர்குலைத்தால், கல வரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ்  வழக்குப்பதிவு செய்த போலீசார், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள வீரா ணம் பகுதியில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
குற்றவாளிகளை 
5 நாள் காவலில் எடுத்த போலீசார்

சென்னை, ஜூலை 11- பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில், பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண் ணன், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை  போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஜூலை 11 அன்று சென்னை எழும்  பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களை 5 நாட்  கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

மின் இணைப்பு பெறும் விதிமுறைகளில் தளர்வு!

சென்னை, ஜூலை 11- தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறு வதற்கான விதிமுறைகளில் தளர்வு என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதன்படி 14 மீட்டர் உயரத்திற்கு மிகா மல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டடங்கள், 750 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடு,  14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர்  கட்டட பரப்பளவுக்கு உட்பட்ட வணிக கட்டடங்கள் ஆகியவற்றுக்கு மின் இணைப்பு பெற ‘கட்டட நிறைவு சான்றி தழ்’ தேவை இல்லை என்று அறி விக்கப்பட்டு உள்ளது. இது அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்
இவிஎம் வைப்பறைக்கு 
3 அடுக்கு பாதுகாப்பு

விழுப்புரம், ஜூலை 11- விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி  இடைத் தேர்தலில் 82.48 விழுக்காடு வாக்  குகள் பதிவாகின. இது கடந்த தேர்தலை விட ஒரு விழுக்காடு கூடுதலாகும். இந்  நிலையில், வாக்குகள் பதிவு செய்யப் பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் அனைத்தும் பணையபுரம் அரசு  மேல்நிலைப்பள்ளி வளாக வைப்பறை யில் வைத்து, ஜூலை 11 அன்று காலை  11.45 மணிக்கு சீல் வைக்கப்பட்டது. தேர்  தல் பொது பார்வையாளர் அமித் சிங்  பன்சால், மாவட்ட ஆட்சியர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச், தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக மாவட்டத் தலைவர் பழனிவேல், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் யுவ ராஜ் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து சீல் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூமிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. 

பத்திரப் பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

சென்னை, ஜூலை 11- ஆணி மாதத்தின் கடைசி முகூர்த்த தினமான ஜூலை 12 வெள்ளிக்கிழமை பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு  டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன.

கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்கு மாறு பொதுமக்களிடம் இருந்து வந்த  கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு  சார் பதிவாளர் உள்ள அலுவலகங்க ளுக்கு 100-க்குப் பதிலாக 150 முன்பதிவு  டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது என்றும் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஷச் சாராய மரணம் 
சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

சென்னை, ஜூலை 11- கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து இதுவரைக்கும் 66 பேர் பலியாகி யுள்ளனர். சிபிசிஐடி விசாரித்து வரும்  இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக சார்பில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்  யப்பட்டது. வியாழக்கிழமை (ஜூலை 11)  நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை யின் போது, சிபிஐ விசாரணை கோரி  வழக்கு தொடர்ந்துள்ள அனைவருக்கும் அறிக்கை மற்றும் பதில் மனு தர வேண்  டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட  நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.