tamilnadu

மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீதும் பாலியல் புகார்....

சென்னை
சென்னையில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் என்பவர் மீதும் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள் ளதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜூன் 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி அப்துல் பாருக் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை ஐந்து நாட்களுக்கு போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.இந்த நிலையில், சென்னை பாரிமுனையில் விளையாட்டு பயிற்சி மையத்தில் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.இதற்கிடையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

;