திருவண்ணாமலை, ஜுலை 28- வறுமைக்கோட்டிற்கு கீழ் தையல் தொழிலில் ஈடு பட்டுள்ள பெண் தொழி லாளர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டும் என திருவண்ணா மலை மாவட்ட தையல் தொழி லாளர் சங்கம் தீர்மானம் இயற்றியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தையல் கலை தொழிலாளர் சங்கத்தின் கூட்டம் எம்.ஜீனத் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். வீரபத்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார், தலைவராக பெபராபீவி, செயலாளராக எம். ஜீனத், பொருளாளராக ஏ.அப்துல் காதர் உள்ளிட் 15 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தொழிலாளர் அலுவலர் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில், விண்ண ப்பித்த தையல் கலை தொழி லாளர்களுக்கு, நல வாரியம் சார்பில் உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும், தையல் தொழில் செய்துவரும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகி யோர், சமூக நலத்துறையில் விண்ணப்பித்துள்ள வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இலவச தையல் இயந்திரம் உடனடியாக வழங்க வேண்டும், தையல் தொழில் செய்து வரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண் தொழி லாளர்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.