tamilnadu

கோவில், ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர சோதனை

சென்னை, ஏப்.27-புதுச்சேரியில் கடந்த சில நாட்களாககடற்கரை பகுதி, தேவாலயங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று பயணிகளின் உடமைகள், பார்சல் உள்ளிட்டவற்றை வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் சோதனையிட்டனர்.திருவண்ணாமலையில் உள்ளஅண்ணாமலையார் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள் ளன. பாதுகாப்பு கருதி கோவிலின் பின்புறம் உள்ள கோபுரத்தின் வழி மூடப்பட்டுள்ளது. ராஜகோபுரம், திருமஞ்சனகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம்என 3 கோபுரங்கள் வழியாக தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

;