tamilnadu

சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளி 99.9 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை

அம்பத்தூர், ஏப். 22-அம்பத்தூர் புதூர் பகுதியில் உள்ள சேதுபாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 99.9 சதவீத தேர்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனர்.12ஆம் வகுப்பு தேர்வில் சேதுபாஸ்கரா பள்ளியிலிருந்து பங்கேற்ற 1,131 மாணவர்களில் 1,130 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் 53மாணவர்களுக்கு தகுதிஅடிப்படையில் நிர்வாகம்இலவச கல்வி வழங்கிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கணித அறிவியல் பாடப் பிரிவில் 28 மாணவர்களும், வணிகவியல் பாடப் பிரிவில் 7 மாணவர்களும், வணிகக் கணிதம் பாடப் பிரிவில் 2 மாணவர்களும், கணக்கியல் பாடப் பிரிவில்15 மாணவர்கள் என 28 பேர்100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 51 மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் 100க்கு 99மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.பள்ளியின் தாளாளர் சேதுகுமணன், முதல்வர் எஸ்.பி.பி.செல்வகுமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தனர்.

;