சென்னை, டிச. 21- கோவையைச் சேர்ந்த 65 வயதுள்ள பெரி யவர் ஒருவர், சென்னை, சிம்ஸ் மருத்துவ மனையில் அண்மையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு இதயப் பகுதியில் தொடங்கும் வலி, மெல்ல பயணித்து, வயிறு மற்றும் முதுகுப் பகுதி வரை செல்வதாகக் கூறினார். இந்த வலி வடபழனி சிம்ஸ் மருத்து வமனைக்கு வருவதற்கு முந்தைய நாள் தொடங்கி, கடுமையாக இருந்துள்ளது. இவரை முழுமையாகப் பரிசோதித்ததில் இவருக்கு தீவிர பெருநாடிப் பிளவு நோய் இருப்பதும், கூடவே ரத்தத்தை நாளங்க ளுக்குள் விரைந்து செலுத்தும் வால்வு ஒழுகிக் கொண்டிருப்பதும், இதயத்தில் இருந்து ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனி களின் இறுதியில் கிழிசல் இருப்பதும் தெரிய வந்தது. இந்தச் சூழல் மிகவும் ஆபத்தானது. உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அவற்றை சரி செய்யாவிட்டால், உயிர் இழப் புக்கும் வாய்ப்புண்டு. இதனால், அடுத்த அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை யைத் தொடங்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சை மேற்கொண்ட சிம்ஸ் மருத்துவ மனையின் இதய நோய்களுக்கான தனிப் பிரிவு இயக்குனரும், பிரபல மருத்துவரு மான டாக்டர் வி.வி. பாஷி, செய்தியாளர் களிடையே பேசுகையில், “பெருநாடி பிரச்ச னைகளை முன்னதாகக் கண்டறிவது எளி தானதல்ல; பெரும் சவால் நிறைந்தது. அதி லும், ஒரே நேரத்தில் 3 விதமான பிரச்சனை கள் இருப்பதைக் கண்டுபிடிக்க மிகவும் நுட்ப மான மருத்துவ ஆய்வுகள் தேவைப் பட்டன. இந்த தொழில்நுட்ப வசதி சிம்ஸ் மருத்துவமனையின், இதய நோய்க்கான தனிப் பிரிவில் (ICAD) இருந்தமை யால் உரிய நேரத்தில் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. அதோடு, இனம் காணப் பட்ட 3 பிரச்சனைகளுக்கும், ஒரே நேரத்தில்… அதுவும் போதுமான கால அவகாசம் இல்லா மல் - அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சையைத் தொடங்கி, வெற்றிகரமாகத் தீர்வு காண்பது என்பது இன்னும் பெரிய சவாலாக இருந்தது” என்றார்.