tamilnadu

img

சிறுபான்மையினருக்கு தனித்துறை சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாடு வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 1 - சிறுபான்மையினருக்கென்று தனித் துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டுமென்று  தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி உள்ளது. சிறுபான்மை நலக்குழுவின் தென்சென்னை மாவட்ட 3வது மாநாடு ஞாயிறன்று (மார்ச் 1) தரமணியில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக விசாரணையின்றி சிறையில் இருக்கும் முஸ்லீம்களை விடுதலை செய்ய வேண்டும், தலித் கிறிஸ்துவர்களை பட்டியலினத்தில் சேர்க்க வேண்டும், சென்னையில் உள்ள உருது பள்ளிகளை மேம்படுத்துவ தோடு, மானியத்தை முறையாக வழங்க வேண்டும், பள்ளிவாசல், தேவால யங்கள் புதிதாக கட்டும்போது எழும் அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ஏ.பாக்கியம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜி.ரஹ்மத்துல்லா கொடியேற்றினார். கண்காட்சியை மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ராசிக் திறந்து வைத்தார். துணைச்செயலாளர் எஸ்.ரஃபிக் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தமீம்பாஷா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைத்தலைவர் என்.நன்மாறன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஒய்.இஸ்மாயில் அறிக்கை வாசித்தார். சமூக செயற் பாட்டாளர் க.பீம்ராவ், அருட்தந்தை ஆரோக்கியதாஸ், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எம்.ராமகிருஷ்ணன், சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி, தரமணி பள்ளிவாசல் தலைவர் ரஹ்மத்துல்லா, நலக்குழு மாவட்ட பொருளாளர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து நலக்குழுவின் மாநில துணைத்தலைவர் தெ.லட்சுமணன் பேசினார்.
நிர்வாகிகள்
நலக்குழுவின் மாவட்டத் தலைவ ராக ஏ.பாக்கியம், செயலாளராக ஒய்.இஸ்மாயில், பொருளாளராக கே.மணிகண்டன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.