சென்னை, செப். 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு, கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகிறது.
செப்டம்பர் 23 அன்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடை பெறும் இந்நிகழ்வுக்கு, கட்சியின் மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் அசோக் தாவ்லே, தோழர் சீத்தாராம் யெச்சூரியின் படத்தைத் திறந்து வைக்கிறார்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, மூத்த பத்திரிகையாளர் என். ராம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி., சிபிஐ(எம்எல்) லிபரே சன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத் தம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலை வர் தி. வேல்முருகன் எம்எல்ஏ, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செய லாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்எல்ஏ ஆகி யோர் நினைவேந்தல் உரையாற்று கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி நன்றி கூறுகிறார்.