tamilnadu

img

செந்தில் பாலாஜி காவல் மேலும் நீட்டிப்பு!

சென்னை, மார்ச் 28- சட்டவிரோத பணப் பரிமாற்ற  தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்  கத்துறை பதிவு செய்த வழக்கில் கூடுதல் வாதம் செய்ய அனுமதி கோரி முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட  3-ஆவது கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி ஆனந்த்,  அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். இதை யடுத்து, விசாரணை ஏப்ரல் 4-ஆம் தேதிக்கு தள்ளி  வைக்கப்பட்டு உள்ளது. இதனால், செந்தில் பாலாஜி யின் நீதிமன்ற காவல் மீண்டும் நீடிக்கப்பட்டது.

;