tamilnadu

img

பெண் ஊழியருக்கு மூத்த அதிகாரி பாலியல் தொல்லை

சென்னை:
பாலியல் தொல்லையால் சிஎம்டிஏ பெண் ஊழியர் ராஜினாமா செய்த விவகாரம் தொடர்பாக, மூத்த அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு, மாநில மனித உரிமைகள் ஆணையம் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலருக்கும், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திட்டமிடல் துறையில் பணியாற்றி வரும் மூத்த அதிகாரி ஒருவர், தனக்கு கீழ் பணிபுரிந்த பெண் ஊழியருக்கு வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து உயரதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில் அந்த பெண் வேலையை ராஜினாமா செய்த தாகக் கூறப்படுகிறது. பெண் ஊழியருக்கு அனுப்பப்பட்ட வாட்ஸ் அப்
குறுஞ்செய்திகள் சமூக வலை தளங்களில் வெளியானது குறித்துபத்திரிகைகளில் செய்தி வெளியானது. பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணை யம் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர் பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக வீட்டு வசதித்துறை செயலாளர், சென்னை சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் ஆகியோர்  நான்கு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

;