வேலைக்காக 12 ஆண்டுகளாக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள்
கடலூர், ஜூன் 9- கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் நியமன தேர்வை தமிழ்நாடு முழுவதும் 25,606 பேர் எழுதினர். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் அறி வித்துள்ள 2,768 காலிப்பணியிடங்கள் 12 ஆண்டுகளாக பணி வாய்ப்பிற்காக காத்திருக்கும் அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2013ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரு காலி பணியிடத்தை கூட நிரப்பவில்லை. ஆனால் 2013, 2017, 2019 மற்றும் 2022ஆம் ஆண்டு வரை நான்கு முறை தகுதி தேர்வு நடத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நடை பெற்ற நியமன தேர்வை நம்பி காத்திருந்த அவர்கள் தற்போது 40 வயது முதல் 50 வயதில் வயதை கடந்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருக்கும் போது தற்போது அறிவித்துள்ள காலிப்பணியிடங்கள் மிகவும் சொற்பமான கருதுகின்றனர். எனவே தற்போது உள்ள முழு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள னர். நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற 23 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கும் போது தற்காலிக ஆசிரியர்களை நிய மிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.