tamilnadu

img

திரைக்கதிர் சோழ. நாகராஜன்

இரண்டே நாட்களில் 
‘ஆன்டி’ இந்தியன் ஆனேன்...
விஷ்ணு விஷால் வருத்தம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி யிருக்கும் ‘லால் சலாம்’ படத்தின்  டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னை யில் நடந்தது. இதில் கலந்துகொண்ட நடிகர் விஷ்ணு விஷால் பேசியது: 

“சில நாட்களுக்கு முன் ‘பாரத் ஓ இந்தியா’ விவகாரத்தின்போது  இரண்டும் ஒன்று தானே, எதற்கு இந்த பெயர் மாற்றம் என  யோசித்தேன். அதை நான் ட்வீட்டாக பதிவு  செய்யும்போது அந்தப் பதிவு வைரலாகி, நிறையப் பின்னூட்டங்கள் வந்தன. அரசியல் தொடர்பான எதையும் நான் இதுவரை பதிவிட்டதில்லை. ஏனெனில் எனக்கு அரசியல் தெரியாது. இந்த விவகாரத்தில் ஓர் இந்திய குடிமகனாக எனக்கு என்ன தோன்றியதோ அதைப் பதிவு செய்தேன்.என் கருத்து எனக்குத் தவறாகத் தெரிய வில்லை. ஆனால் அதற்கு வந்த எதிர்ப்பு மிகஅதிகம். இரண்டே நாட்களில் நான்  ‘ஆன்டி’ இந்தியன் ஆகிவிட்டேன். ‘ஆன்டி’ இந்துவாகிவிட்டேன். நிறைய விஷயங் களில் ‘ஆன்டி’யாகிவிட்டேன். ‘ப்ரோ’ (Pro) ஆகிவிட்டேன். என் இணையர் வெளி நாட்டவர் என்பதால் நான் இந்த ஊரைச் சேர்ந்தவனில்லை என ஆகிவிட்டேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை.  ஏன் இத்தனை வெறுப்பு, ஏன் நாம் எல்லோரும் இப்படி இருக்கிறோம், ஒருவருக்கு ஒருவர் கொள்கைகள் மாறலாம். கருத்துக்கள் மாற லாம். அதற்கும் மரியாதை கொடுப்பதுதானே மனிதம். பிடிக்கவில்லை என்பதால் அவர்களை தாழ்த்திப் பேசக்கூடாது. நம் நாட்டில் தற்போது இந்த வெறுப்பு அதிகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் அதிகமாக இருக்கிறது!” என்றார்.

கிராமி விருதும், ஒடுக்குமுறையும்...

உலகெங்கிலுமுள்ள இசை  கலைஞர்களைக் கௌ ரவிக்கும் விதமாக அமெரிக்கா வில் ஒவ்வொரு வருடமும் “கிராமி விருதுகள்” வழங்கப்பட்டு வரு கின்றன. இசைத் துறையின் உய ரிய விருதாகக் கருதப்படும் இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த முறையில் பங்காற்றி யவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதன் 66-வது விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா வில் இந்தியாவின் ஜாகிர் உசேன் மற்றும் சங்கர் மகாதேவனின் ஃபியூஷன் இசைக்குழுவான சக்தி இசைக்குழு உருவாக்கிய சமீபத்திய இசை ஆல்பமான ‘திஸ் மொமென்ட்’க்கு சிறந்த உலக ளாவிய இசை ஆல்பம் பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன. 

இந்நிகழ்வில் பிரபல ராப் பாடகர் கில்லர் மைக் ‘சிறந்த ராப் பாடல்’ ‘சிறந்த ராப் பர்ஃபாமென்ஸ்’ ஆகிய இரண்டு பிரிவுகளில் 2 கிராமிய விருது களும், சிறந்த ராப் ஆல்பம் பிரிவில் ‘மைக்கேல்’ ஆல்பத்துக்கு ஒரு கிராமிய விருதும் என மொத்தம்  3 விருதுகள் வழங்கப்பட்டன. இவர் ராப் பாடகர் மட்டுமல்ல, கருப்பின மக்கள் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தும் வருபவர். விருதுபெற்ற பின் கில்லர் மைக் அரங்கத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல் துறையால் சிறிது நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கை தான சில மணிநேரங்களில் விடுவிக்கப்பட்ட அவர் இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். கலைஞர்கள் போராளி களாகவும் இருப்பது பொறுக்குமோ?

கலையின் காரணமாக கலைஞர்கள் சிறையில் அடைக்கப்படலாம்...

மலையாள இயக்குநர் ஜியோ பேபி. இவர் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘காதல் தி கோர்’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர். அவர் பேட்டி ஒன்றை அண்மையில் அளித்திருந்தார். அதில் ஜியோ பேபி கூறியது கவனிக்கத்தக்கது. அவர் சொன்னது இதோ: 

“இந்தியாவில் இப்போது நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் எனக்கே அச்சமாக இருக்கிறது. மதம் மற்றும் அரசியல் காரணங்களால் நாங்கள் சென்சாரு டன் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக் கிறது. படைப்பாளிகளை மட்டுமல்ல... இது கலைஞர் களையும் பாதிக்கிறது. படைப்புச் சுதந்திரத்தைப்  பாது காக்க எல்லோரும் ஒற்றுமையாகவும் உறுதியாகவும்  இருப்பது அவசியம். என்றாலும் துரதிர்ஷ்டவசமாகச் சிலர் பயந்து பின்வாங்கி விடுகிறார்கள். அண்மையில் ஓடிடியில் வெளியான நயன்தாரா நடித்த  ‘அன்ன பூரணி’ திரைப்படம் மத உணர்வுகளைப் புண்படுத்திய தாகக் கூறி ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. ஆனாலும் அதன் படக்குழு இதனை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. உண்மையிலேயே தாங்கள்தான் ஏதோ ஒரு குற்றத்தைச் செய்கிறோம் என்று அவர்களே நம்பி அதை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள். சினிமாவுக்கோ அல்லது கலைஞர்களுக்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ இது நல்லதல்ல.

2007-ல் திரைப்பட மாணவனாக இருந்தபோது நான் இயக்கிய ‘சீக்ரெட் மைண்ட்ஸ்’ ((Secret Minds) என்ற குறும்படம் தன்பால் ஈர்ப்பாளர்கள் பற்றியது. அந்தப் படத்துக்காக ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். 2005-ம் ஆண்டிலிருந்து நான் தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்து நிறையப் படித்துத் தெரிந்துகொண்டேன். அவர்களும் நம்மைப் போல சாதாரண மனிதர்கள் தான். ‘காதல் தி கோர்’ திரைப் படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும், தன்பால் ஈர்ப்பாளராக மேத்யூ கதாபாத்திரத்தில் மம்மூட்டி நடித்ததற்கு பலரும் அவரை விமர்சித்தார்கள். ஆனாலும்,‘காதல் தி கோர்’ படத்தை மக்கள் ஏற்றுக்கொண்டதைப் பார்க்கும்போது நம்பிக்கை வருகிறது. 

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் பெயரில் லாத நிமிஷா கதாபாத்திரம் மனைவி என்ற ஒற்றை  அடையாளத்தால் மட்டுமே வாழ்கிறது. நம் சமூகம் சரியாக இருந்தால் நான் இந்த இரண்டு வகையான படங்களை இயக்குவதற்கான தேவையே இருந்திருக் காது. வேறு எதாவது கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியிருப்பேன். ‘காதல் கோர்’ ஓடிடியில் வெளியான பிறகு, நாடு முழுவதிலும் இருந்து நிறைய பாராட்டு களைப் பெற்றது. எனக்கு மின்னஞ்சல்கள் வருகின்றன. பரந்த பார்வையாளர்களைப் பெறுகிறோம். நமது அர சியல், சித்தாந்தம், கன்டென்ட் பல்வேறு நாடுகளைச் சென்றடைவதை நல்ல விஷயமாகப் பார்க்கிறேன்.

சமூகத்தில் நிலவும் பிற்போக்கு நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இன்றைய சூழ லின் ஒரு கட்டத்தில் நிறைய கலைஞர்கள் தங்கள் கலை யின் காரணமாக சிறையில் அடைக்கப்படலாம் என நான் அச்சப்படுகிறேன். ஆனால் நாம் ஒன்றுபட்டுப் போராடினால் இதில் வெற்றி பெறுவோம் என்பதும் எனக்குத் தெரியும். காரணம் கலையின் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது!” என்றார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் எனும் அதிசய மனிதர்...

சேலத்தில் இயங்கிவந்த மாடர்ன் தியேட்டர்ஸ் படநிறுவனம் மிகுந்த ஒழுங்கு - கட்டுப்பாடுகளுக்குப் பெயர்பெற்றது. அதனை நிறுவி, நிர்வாகித்துவந்த டி.ஆர்.சுந்தரம் லண்டனில் கல்வி கற்றவர். எத்தனை பெரிய நடிகராக இருந்தாலும் மாடர்ன் தியேட்டர்சின் கட்டுப்பாடுகளை மீற அனுமதி இல்லாத நிலையை சுந்தரம் ஏற்படுத்திப் பராமரித்து வந்தார். அந்நாளைய மெகா நட்சத்திரமான பி.யூ.சின்னப்பா போன்ற வர்கள்கூட இதற்கு விதிவிலக்காக இருந்ததில்லை. 

கவியரசு கண்ணதாசன் ஒரு நடிகையோடு அதிகமாக அரட்டையடித்துக்கொண்டிருக்கிறார் என்ற காரணத்திற்காகவே அவர் வெளியேற்றப் பட்ட நிகழ்வும் நடந்ததுண்டு. அத்தனை கண்டிப்பானவராக அன்றைய திரையுலகில் பேசப்பட்டவர் டி.ஆர். சுந்தரம். அலிபாபாவில் எம்.ஜி.ஆர். பேசவேண்டிய வசனம், “அல்லா வின் ஆணைக்குப் பணிகிறேன்...” - என்பது. எம்.ஜி.ஆர். இந்த வசனத்தைப் பேசச் சங்கடப் பட்டார். நெளிந்தார். பின்னர் அதை “அன்னையின் ஆணைக்குப் பணிகிறேன்” என்று பேசிவைத்தார். 

இதனை தூரத்திலிருந்த டி.ஆர்.சுந்தரம் கவனித்துவிட்டார். தன் நினைவில் அந்த வசனம் அப்படியில்லையே என்று உணர்ந்தார். எம்.ஜி.ஆரிடம் கேட்டார். அவர் அதனை மாற்றிப் பேசியதை ஒப்புக்கொண்டு, அப்படியே இருக்கட்டுமே என்றார். சுந்தரம் அதை ஏற்க வில்லை. கதைக்கு அது பொருத்தமாக இருக்காது. எனவே, எழுதப்பட்ட வசனத்தை மாற்றக் கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். டி.ஆர்.சுந்தரத்தின் பிடிவாதமான ஒழுங்கு - கட்டுப்பாடுகளை நன்கு அறிந்த எம்.ஜி.ஆர். பிறகு மறுபடியும் எழுதியிருந்ததன்படியே பேசி அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

உத்தம புத்திரன், ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி, மந்திரி குமாரி, சர்வாதி காரி, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற பெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களை உருவாக்கிய பெருமை மாடர்ன் தியேட்டர்சையே சாரும். தமிழின் முதல் முழுநீள வண்ணப்படம் அலிபாபாதான். வளையாபதி, பொன்முடி, ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி முத லான படங்களுக்கு வசனமெழுதிய பாவேந்தர் பாரதிதாசன் அதிகமாகப் பணியாற்றியது மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களில்தான். மாடர்ன் தியேட்டர்சின் மந்திரிகுமாரி எனும் மகத்தான வெற்றிச் சித்திரத்தின் வாயி லாகத்தான் பெரும் புகழ்பெற்ற வசனகர்த்தா வாக மக்களைக் கவர்ந்தார் கலைஞர் மு.கரு ணாநிதி. இப்படியான சிறந்த எழுத்தாளர்களைத் தனது கதை இலாகாவில் மாத ஊதியத்திற்குப் பணியமர்த்திக்கொள்கிற வழக்கத்தைக் கொண்டிருந்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம். 

இப்படித்தான் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மாடர்ன் தியேட்டர்ஸ் உருவாக்கிய பாச வலை படத்தில் முதன்முதலில் பாடல் எழுதிப் புகழ்பெற்றார். சுந்தரத்தின் அறையில் சுந்த ரத்துக்கு மட்டுமே நாற்காலி இருக்கும். யாராக இருந்தாலும் அவருடன் நின்றுகொண்டுதான் பேசலாம். அப்படித்தான் ஒருநாள் பட்டுக் கோட்டையாரும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் சுந்தரத்துடன் அவரது அறையில் நின்றுகொண்டே உரையாடிக் கொண்டிருந்தார்கள். முதலாளி என்ற வகையில் சுந்தரம் மட்டும் நாற்காலியில் அமர்ந்தபடி பேசலா னார். பட்டுக்கோட்டையாரிடம் படத்தின் காட்சி விளக்கப்பட்டு, பல்லவியை எழுதுமாறு கூறினார் சுந்தரம். உடனடியாக பட்டுக்கோட்டையார் சுந்தரத்தின் மேசைமீது வெள்ளைத்தாளை வைத்து விருவிருவென எழுதி சுந்தரத்திடம் நீட்டினார்.  அந்தத் தாளை வாங்கிப்படித்த சுந்தரம்  உடனே அழைப்பு மணியை அடித்தார். வேலை யாள் உள்ளே வந்தார். இரண்டு நாற்காலி களைக் கொண்டுவரக் கட்டளையிட்டார் சுந்தரம். முதன்முறையாக சுந்தரம் அறைக்கு மற்றவர்கள் உட்கார நாற்காலிகள் வந்தன. விஸ்வநாதனையும் கல்யாணசுந்தரத்தையும் உட்காரச் சொன்னார் சுந்தரம். தன் கையிலிருந்த இன்னொரு தாளில் ஒரு பல்லவியை எழுதித் தந்தார் பட்டுக்கோட்டையார். அதை வாங்கிப் படித்த சுந்தரத்திற்குத் திருப்தி. 

அவர்கள் வெளியே வந்ததும் முதலில் என்ன எழுதினாய் என்று எம்.எஸ்.வி. பட்டுக் கோட்டையிடம் கேட்டார். நம் இரண்டுபேருக்கும் முதலில் நாற்காலி போடுங்கள் என்று எழுதித் தந்தேன் என்றார் பட்டுக்கோட்டை. எங்கும் தன் போர்க்குணத்தை மறக்காத பட்டுக்கோட்டை யின் கோரிக்கையை ஏற்ற சுந்தரத்திடம் நியாய மென்றால் ஏற்கும் பெருந்தன்மை இருந்தது. இப்படித்தான் அன்றைய கலையுலகினர் வியக்கவைக்கும் மனிதர்களாகவும் இருந்திருக் கிறார்கள்!