tamilnadu

ஊக்கத்தொகை ரூ.25 லட்சம்

சென்னை, நவ.10- கடந்த ஜூலை மாதம் ‘சந்திரயான் 3’  விண்கலம் தயார் செய்யப்பட்டு நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகர மாக தரையிறக்கப்பட்டது. இந்தி யாவே பெருமைப்படும் தருணமாக அமைந்த இந்த நிகழ்வுக்கு இயக்கு நராக பணியாற்றியவர் ஒரு தமிழர் ஆவார்.

அதுமட்டுமின்றி, நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ  சந்திரயான் திட்டத்தை துவக்கிய போது, அதன் திட்ட இயக்குநராக கோவையை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.

அப்போது சந்திரயான் 1 நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. தொடர்ந்து சந்திரயான்-2 திட்ட இயக்குநராக வனிதா முத்தையா இருந்தபோது திட்டத்தின் இறுதி பகுதி  வரை வெற்றிகரமாக இயங்கிய போதி லும் கடைசி கட்டத்தில் யாரும் எதிர் பாராத விதமாக தோல்வியை தழு வியது.

இருப்பினும் முயற்சியை விடாமல்  3-வது முறையாக நிலவுக்கு சந்திரயான் 3 அனுப்பப்பட்டது. சந்திரயான் 3 திட்ட இயக்குநராக விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல் இருக்கிறார். இவரும் அரசுப் பள்ளியில் பயின்றவர் ஆவார். தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்1’ திட்டத்தின் இயக்குநராக மீண்டும் அரசு பள்ளியில் பயின்ற நிகர் ஷாஜி என்ற தமிழர் இருக்கிறார். இவரும் அரசு பள்ளியில் பயின்றவர் ஆவார்.

இந்த சூழலில் அரசு பள்ளியில் பயின்று இஸ்ரோவில் சாதித்த தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு, கடந்த அக்டோபரில் “ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்” என்ற  தலைப்பில் பாராட்டு விழா நடத்தியது.  இதில் கே.சிவன், மயில்சாமி அண்ணா துரை, வி.நாராயணன், ஏ.ராஜராஜன், எம்.சங்கரன், ஆசீர் பாக்கியராஜ், டாக்டர் எம்.வனிதா, டாக்டர் நிகார் ஷாஜி, டாக்டர் பழனிவேல் வீரமுத்து ஆகிய 9 பேரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

மேலும் 9 விஞ்ஞானி களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, 7.5% ஒதுக்கீட்டின் கீழ் அரசு கல்வி உதவித்தொகைப் பெற்று இளநிலை பொறியியல் படிப்பினை முடித்து, முதுநிலை பொறியியல் படிப்பினை தொடரும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானிகளின் பெயரில் அமைக்கப்படும் உதவித் தொகை வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் அவர்களின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழ்நாடு அரசு வழங்கிய  ரூ.25 லட்சம் தொகையை தான் படித்த  4 கல்லூரிகளுக்கு பிரித்து வழங்கி யுள்ளார்.  அதாவது விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்திற்கு ரூ.25 லட்சத்தை பிரித்து கொடுத்தார் விஞ்ஞானி வீரமுத்துவேல். அவரது செயல் தற்போது அனைவர் மத்தியி லும் பாராட்டுகளை பெற்று வருகிறது.