tamilnadu

img

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து திங்களன்று (ஜூன் 3) பள்ளிகள் திறக்கப்பட்டன

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து திங்களன்று (ஜூன் 3) பள்ளிகள் திறக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் நாளன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர். கவரைப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்  6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை  2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச பாட புத்தகங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யப்பன் வழங்கினார். உடன் உதவி தலைமை ஆசிரியர் புஷ்பலதா உட்பட பல ஆசிரியர்கள் உடனிருந்தனர்.