தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து திங்களன்று (ஜூன் 3) பள்ளிகள் திறக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் நாளன்று மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர். கவரைப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச பாட புத்தகங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யப்பன் வழங்கினார். உடன் உதவி தலைமை ஆசிரியர் புஷ்பலதா உட்பட பல ஆசிரியர்கள் உடனிருந்தனர்.