tamilnadu

img

பள்ளி பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியீடு

சென்னை:
10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை 3 வது வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். அமைச்சர் செங்கோட்டையன் மேலும் கூறுகையில், 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை  3-வது வாரத்தில் வெளியிடப்படும். தற்போது பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே சாத்தியம். சென்னை மாவட்ட கல்வி நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னையில் பொதுத்தேர்வு எழுத 115 சிறப்பு தேர்வு மையங்கள் உள்ளன. வீடுகளில் இருந்து தனியாக வேனில் அழைத்துச் செல்லப்படுவார்கள். தனி அறையில்வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்வு முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு வேனில்அழைத்துச் செல்லப்படுவார்கள். சுகாதாரத்துறை உதவியுடன் அதிக பாதிப்பு பகுதிகள் கண்டறிப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

;