சென்னை, மே 28-சசிகலா மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் உபகரணங்கள் வாங்கியதில் அன்னிய செலாவணி மோசடி என தொடரப்பட்ட வழக்கில் சசிகலா, பாஸ்கரன் நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சசிகலா வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.இந்நிலையில், செவ்வாயன்று(மே28) எழும்பூர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் உயர்நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிக் கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கு ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக விசாரணையை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.