சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொடர் போராட்டங்கள் அறிவிப்பு
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
காஞ்சிபுரம்,மே 7- ஊதிய உயர்வு, பொது கோரிக்கைகளின் மீது சிஐடியு தொழிற்சங்கத்துடன் நேரடி உடன்பாட்டிற்கு அல்லது ஏற்பு அறிவுரை அடிப்படையில் சுமூக தீர்வு காண நிர்வாகம் முன்வர வேண்டும் என சாம்சங் இந்தியா நிர்வாகத்தை சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) கேட்டுக் கொண்டுள்ளது. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் காஞ்சி புரத்தில் சங்கத் தலைவர் இ.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. சாம்சங் இந்தியா நிர்வாகம் ஆதரவு பெற்ற குழுவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர்களுக்கு மட்டுமே சம்பளம், மற்றவர்களுக்கு இல்லை என்கிற தொழிலாளர் விரோத சட்ட விரோத நடவடிக்கைகளை கூட்டம் வன்மையாக கண்டித்துள்ளது. சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 25 பேர் பணிஇடைநீக்கம் மற்றும் அனைத்து பழிவாங்கல் நடவடிக்கைகள் மற்றும் விசா ரணைகள் முழுமையாக கைவிட வேண்டும், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு தீர்வுகாண தமிழக அரசும் தொழிலாளர் துறையும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்த சிஐடியு முடிவு செய்துள்ளது. போராட்டங்கள் செவ்வாயன்று (மே 13) ஒரு நாள் உணவு புறக்கணிப்பு போராட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள், மே 14 அன்று மாவட்டத் தலைநகர் காஞ்சி யில் மாவட்ட ஆட்சியரை தலையிட வலி யுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பேரணி நடை பெறும், மே 16 அன்று சட்டவிரோத உற்பத்தி யில் ஈடுபடும் சாம்சங் நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிண்டியில் உள்ள தொழிற்சாலை பாது காப்பு மற்றும் சுகாதாரம் இயக்குநர் அலுவலகம் முன்பு சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு வார்கள், இந்திய தொழிலாளர் சட்டங்களை அவமதித்தும் தொழிற்சங்க உரிமைகளை மறுத்தும் செயல்படும் சட்டவிரோத நட வடிக்கைகளுக்கு எதிராக தென்கொரிய தூதரகம் தலையிட வலியுறுத்தி மே 19 அன்று பெருந்திரல் முறையீடு செய்யப் படும், சாம்சங் தொழிற்சாலையில் நடை பெறும் தொழிலாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் மீது மனித உரிமை ஆணையத்திற்கும் புகார் தெரி விக்கப்படும் என சங்கத்தின் தலைவர் மு.முத்துக்குமார், பொதுச்செயலாளர் பி.எல்லன் ஆகியோர் ஓர் அறிக்கையில் கூட்டாக தெரிவித்துள்ளனர்.