tamilnadu

சேலம் மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

மனநல ஆலோசனை பயிலிரங்கம்

சேலம், மார்ச் 6- பெரியார் பல்கலைக்கழக உளவியல் துறை சார்பில் மன நல ஆலோசனை தொடா்பான இருநாள் பயிலரங்கம் நடை பெற்றது. இந்தப் பயிலரங்கைத் தொடக்கி வைத்து ஆட்சிக் குழு உறுப்பினரும், இதழியல் மற்றும் மக்கள் தொடா்புத் துறை தலைவருமான பேராசிரியா் வை. நடராஜன் கூறியதாவது, மனிதனை மனி தன் புறம் தள்ளும்போது, ஆழ்மனம் அல்ல லுற்று அகம் பேதலிக்கிறது. எங்கெல்லாம் குழு வாழ்க்கை போற்றப்படுகிறதோ, தனி மனிதனுக்கு பின்புல தாங்கு தூணாக அவன் சமூகம் செயல்படுகிறதோ அங்கெல்லாம் மன அழுத்த சிக்கல்கள் முளை விடுவது இல்லை என்றார். பயிலரங்கில் மனநல நிபுணரும், உள  சிகிச்சையாளருமான முனைவா் சகாய ராஜ் பங்கேற்பாளா்களுக்கு மனநல ஆலோ சனை குறித்தும், வல்லுநா்களுக்குத் தேவை யான திறன்கள் பற்றியும் பயிற்சி அளித் தார். ஆலோசனைக்கு வருபவா்களை நுட்மாக வரவேற்பது, அவா்கள் சிக்கல் குறித்து கேட்பது, நோய்க் குறிகளை அறிவது, அதை  களைவது குறித்தும் பயிற்சி  அளிக்கப்பட்டது. பல்கலை. தோ்வாணை யரும் (பொ) உளவியல் துறைத் தலைவ ருமான பேராசிரியா் எஸ்.கதிரவன் வர வேற்றார். உதவிப் பேராசிரியா் ஜெ. பரமேஸ்வரி நன்றி கூறினார். பயிலரங்க ஒருங்கிணைப்பாளா் செல்வ ராஜ், பேராசிரியா் வெங்கடாசலம், உதவிப்  பேராசிரியா்கள் நித்யானந்தம், ஜெயக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா்.

அஞ்சல் குறைகேட்பு கூட்டம்

தருமபுரி, மார்ச் 6- தருமபுரியில் வரும் மார்ச் 30-ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சல் குறைகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி கோட்ட அஞ்சல்  கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி வியாழ னன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி கோட்ட  அளவிலான அஞ்சல் துறை வாடிக்கை யாளா்களின் குறைகேட்பு கூட்டம் வரும் மார்ச் 30-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவ லகத்தில் நடைபெற உள்ளது. எனவே, அஞ்சல் வாடிக்கையாளா்கள் அஞ்சல் துறை சார்ந்த குறைகள் இருப்பின், நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ தெரி வித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம். மேலும், தங்களது குறை மற்றும் கோரிக்கை  தொடா்பான மனுக்களை தெளிவாக குறிப்பிட்டு, கடிதத்தின் மேல் குறைகேட்பு கூட்டத்துக்கு என குறிப்பிட்டு வரும் மார்ச் 20-ஆம் தேதிக்குள் தருமபுரி அஞ்சல கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்- காவல்துறை விசாரணை

ச், மார்ச் 6- தருமபுரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் துன்பு றுத்தல் அளித்ததாக இளைஞர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்துள்ள தாளநத்தம் பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவியை, புட்டிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அஜித்  (21) என்ற இளைஞர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தாக தெரிகிறது. இதனால் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை ராமியம்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது அந்த சிறுமி அஜித் என்பவர் பாலியல் தொந்தரவு செய்தார் என்பதை தந்தையிடம் கூறினார். இதுகுறித்து கடத்தூர் காவல் நிலையத்தில் அஜீத் மீது பள்ளி மாணவியின் தந்தை புகார்  செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

 

லாரி மோதி மாணவன் பலி பொதுமக்கள் சாலை மறியல் 

சேலம், மார்ச் 6- லாரி மோதிய விபத்தில் தந்தை கண் முன்னே மாணவன்  பலியானதால், ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கோனேரி வளவு பகுதியில் நெசவுத் தொழில் செய்து வருபவர் செந்தில்.  இவரது மகன் கதிர்வேல் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கதிர்வேலை பள்ளியில் விடுவதற்காக செந்தில் தனது இருசக்கர வாக னத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சேலம் -  ஈரோடு நெடுஞ்சாலையில் துட்டம்பட்டி பகுதியில் சென்று  கொண்டிருந்தபோது சரக்கு லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில்  மாணவன் கதிர்வேல் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால்  ஆவேமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத் திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.  இதனையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த தார மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உத்தரவாதம் அளித் ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  இப்பகுதியில் அதிவேகத்தில் செல்லும் கனரக வாக னங்களால் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளில் அடுத் தடுத்து பலர் உயிரிழந்து வருவதால் அப்பகுதியில் வேகக் கட்டுப்பாடு அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக்கு சென்ற சிறுவன் சாலை விபத்தில் சிக்கி தந்தை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.