tamilnadu

ரூ. 5 ஆயிரத்திற்கும் அதிகமான மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்! மக்கள் பெரும் அவதி

சென்னை, ஆக. 16 - ஒன்றிய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக, தமிழ்நாடு அரசு ஜூலை 1 அன்று மின் கட்டணத்தை உயர்த்தியது. இதனால் நடுத்தர குடும்பங்களுக்கு கட்டணம் கடுமை யாக உயர்ந்துள்ளது.

இரு மாதத் திற்கு ஒரு முறை மின் கட்டணம் கணக்கிடுவதால், ஒரு ஏசி வைத்திருப் பவர்களுக்கு கூட கட்டணம் 5 ஆயி ரம் ரூபாயைக் கடந்து விடுகிறது.  இந்நிலையில், மின் வாரிய அலுவலகங்களில் வெள்ளியன்று (ஆக.16) கட்டணம் செலுத்த சென்ற வர்களிடம், 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊழியர்கள் கட்டணத்தை வசூலிக்க வாங்க மறுத்து விட்டனர்.  

காசோலை, கேட்புவோலை யாக (டிடி) தர வேண்டும் அல்லது செயலி, இ சேவை மையம் உள்ளிட்ட முறைகளில் செலுத்த வேண்டும் என்று கூறினர். இதனால், கட்டணம் செலுத்த சென்ற நுகர்வோர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிருப்தியுடன் திரும்பினர். இதுகுறித்து மின்வாரிய ஊழியர் ஒருவர் கூறுகையில், “5ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட கட்டணத்தை பணமாக வசூலிக்க முடியாத வகையில் கணினியில் அதற்கான வாய்ப்பை மின்வாரியம் முடக்கி விட்டது. முன்னறிவிப்பின்றி திடீரென்று இவ்வாறு செய்ததால் நுகர்வோருக்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல் உருவாகிறது” என்றார்.

“இ-சேவை மையம், ஆன்லைன், டிடி உள்ளிட்ட முறைகளில் செலுத்தினால் மின் கட்டணத்துடன், கூடுதலான தொகையை செலவிட வேண்டியுள்ளது. மின் கட்டணத்தையும் உயர்த்தி விட்டு, இது போன்ற தேவையில்லாத செலவையும் ஏற்படுத்துகின்றனர். ஏற்கெனவே இருந்தது போன்று 10 ஆயிரம் ரூபாய் வரை பணமாக செலுத்த அனுமதிக்க வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் முறையை கொண்டு வர வேண்டும்” என்றும் நுகர்வோர் கூறுகின்றனர்.