tamilnadu

அரிய வகை நோய் பாதிப்புக்கு ரூ.9 கோடி நிதியுதவி

சென்னை,மார்ச் 15- ‘லைசோசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்  கப்பட்ட 11 பேரின் சிகிச்சைக் காக மத்திய, மாநில அரசு கள் ரூ.9.4 கோடி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தில்லியைச் சேர்ந்த லைசோசோமால் ஸ்டோ ரேஜ் டிசார்டர் சப்போர்ட் சொசைட்டி என்ற அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ‘லைசோசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர்’ என்பது மரபுரீதியான வளர்சிதை மாற்ற நோய்களாகும். உடலில் சுரக்கும் அமிலங் களில் கழிவுகள் ஏற்பட்டு முக்கிய பாகங்களில் தேங்கும் ஒருவிதமான பிரச்  சனை ஆகும். இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 45 விதமான நோய்கள் வரும். எலும்பு, மூளை, நரம்பு மண்டலம், தோல் போன்ற முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டு முடிவில் இறப்பு ஏற்படும். இந்த 45 விதமான நோய்களில் 6 நோய்களுக்கு மட்டுமே மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்துகளை பெருந்தொகை செலவு செய்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். சாதாரண மக்களால் இந்த மருந்தை வாங்க முடியாது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் தற்போது 132 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட் டுள்ளனர். இவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க மத்திய, மாநில அரசு களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, சமீபகாலமாக இந்த நோய் அதிகரித்து வருவதாக தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள 132 பேருக்கு ஆண்டுக்கு ரூ.66 கோடி மருத்துவ செல வாகிறது. தொடர் சிகிச்சை வழங்க ரூ.700 கோடி நிதி வேண்டும். அதனால், இந்த நோயை சித்தா, ஆயுர்வேதா, யுனானி என்று இயற்கை மருத்துவ முறைகள் மூலம் குணப்படுத்த முடியுமா? என்று ஆய்வு செய்து வருவ தாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘முதல் கட்டமாக இந்த நோயால் பாதிக்கப்பட்ட 11 பேரின் சிகிச்சைக்கு மத்திய அரசு ரூ.4.4 கோடியும், தமிழக அரசு ரூ.5 கோடியும் வழங்க வேண்டும்’ என்று இடைக் கால உத்தரவு பிறப்பித்த னர்.