tamilnadu

மாதம் ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் முறைசாரா தொழிலாளர் கோரிக்கை

திருவள்ளூர், ஜூன் 14 முறைசாரா தொழி லாளர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும் என பொது தொழிலாளர் சங்கத்தின் சோழவரம் வட்டார மாநாடு கேட்டுக்கொண்டுள்ளது. பொது தொழிலாளர் சங்கத்தின் சோழவரம் வட்டார மாநாடு ஆங்காடு கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் வட்டாரத் தலைவர் ஏ.நடராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகி ஜி.ஏழுமலை வரவேற்றார்.இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட துணைச் செயலா ளர் ஏ.ஜி.சந்தானம் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். ஆர்.பால கிருஷ்ணன் நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் வட்டாரத் தலைவராக ஏ.நடராஜன், வட்டார செயலாளராக கே.நடராஜன், பொருளாள ராக ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்ப ட்டனர்.

தீர்மானங்கள்

நலவாரியத்தில் கால தாமதம் செய்யாமல் சலுகை கள் வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்ய, பணப்பயன் மனு கொடுக்க ஒவ்வொரு முறை யும் தொழிலாளர்கள் நேரடி யாக வர வேண்டும் என்ற நடைமுறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட பலத் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.