பிரபல ரவுடி நெடுங்குன்றம் ஆர்.கே.சூர்யா பாஜகவில் இணைந்ததை அடுத்து அவர் பட்டியலின அணியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.சூர்யா, கொலை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என 200க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பின்னணி கொண்டவர் என்பதும், இவரது மனைவியும், பாஜக மாவட்ட மகளிரணி தலைவியுமான விஜயலட்சுமி, 2021-ஆம் ஆண்டு நெடுங்குன்றம் ஊராட்சி துணை தலைவராக பதவியேற்கும் போது, கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.