tamilnadu

img

600 வகையான உணவுகளை சமைக்கும் ரோபோ

சென்னை, நவ. 16- சமையலறையிலிருந்து பெண்களுக்கு விடுதலையளிக்க வேண்டும் என்று உணவுத்துறை விஞ்ஞானிகள், ஏனைய தொழில்  நுட்ப துறையினருடன் இணைந்து  இன்றளவும் போராடி வரு கிறார்கள்.  அவர்கள் மிக்சி, கிரைண்டர், ஜூஸ் மேக்கர், காபிமேக்கர், காய்கறிகளை வெட்டும் கருவி, இன்டக்ஷன் ஸ்டவ் என தனித்தனி யாக கருவிகளைக் கண்டுபிடித்து  பெண்களுக்கு உதவி செய்தாலும், அவர்கள் சமையலறையில் செல விடும் நேரத்தைக் குறைக்க முடிய வில்லை. வீட்டுச் சாப்பிட்டிற்காக ஏங்கு பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பிடித்த உணவுகளை சாப்பிடுவதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து சாப் பிட்டாலும் அதில் கிடைக்கும் சுவை, நாம் எதிர்பார்ப்பதைவிட குறைவாகத்தான் இருக்கிறது.இந்த எண்ணத்தை செயலாக்கு வதற்காக அறிமுகப்படுத்தப்படு வது தான் ‘ரோபோசெப்’. இந்தி யாவில் முதல் சமைக்கும் எந்திர மனிதன். இதுகுறித்து இந்ந இயந்திர மனிதனை வடிவமைத்த குழு வின் தலைவரும், ரோபோசெப்  நிறுவனத்தின் உரிமையாளரு மான சரவணன் சுந்தரமூர்த்தி கூறு கையில், “மென்பொருள் நிபுண ராக நான் 11 ஆண்டுகள் பணி யாற்றி விட்டு, உணவுத்துறையில் ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த 5 ஆண்டுகளாக என்னு டைய குழுவினருடன் இணைந்து ஆய்வு செய்து, இந்த ரோபோசெப் என்ற இயந்திர மனிதனை வடி வமைத்திருக்கிறோம். இந்த இயந்திர மனிதன் 600 வகையான  உணவு வகைகளை சமைக்கும்  வகையில் வடிவமைத்திருக்கி றோம். அதில் இந்தியன், சைனீஸ்,  வியட்நாம், தாய்லாந்து நாட்டு உணவு வகைகள் என  பலநாட்டு உணவுகளையும் சமைக்கும் வகையில் தயாரித்திருக்கிறோம். இதன் மூலம் தினமும் 3,000 நபர்களுக்கு சமைத்து விநியோ கிக்கிறோம் என்றார்.