tamilnadu

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மத்திய நிதியமைச்சருக்கு தர்ம சங்கடமாம்.... நாடு ‘உருப்பட’ புது யோசனையும் கூறினார்...

சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதால் தர்மசங்கடமாகத்தான் உள்ளது என்று ‘கவலை‘யுடன் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிவரி வரம்புக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 20 சனிக்கிழமையன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு ஒரு எம்பி கூட இல்லை. இருந்தாலும், தமிழகத்திற்கு எவ்வித குறையும் இல்லாமல் பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 -இல் பிரதமர் பதவி ஏற்றவுடன் இலங்கையில் தூக்கு தண்டனை தீர்ப்பு பெற்று தவித்து வந்த 5 மீனவர்களுக்காக நம் பிரதமர் இலங்கை அரசிடம் பேசி அவர்களை நாட்டுக்கு கூட்டி வந்துகுடும்பத்துடன் சேர்த்தார்.

அது போல தமிழகத்திற்கு ஒவ்வொரு துறைக்கும் ஏதோ ஒரு விதத்தில் மத்திய பட்ஜெட் டில் இருந்து நிதி உதவியை நீட்டித்துத்தான் இருக்கிறோம். பிரதமர் தமிழகத்திற்கான தேவைகளை குறையின்றி நிறைவேற்றி வருகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வரிகுறைப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலைஉயர்ந்திருப்பதால் எனக்கு தர்மசங்கடமாகத் தான் உள்ளது. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள்கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். என்ன நம்ம நாடு இப்படி இருக்கே என சொல்வதை விட்டால் தான் நாம்உருப்படுவோம் என்று புது யோசனை தெரிவித்தார்.

எண்ணெய் நிறுவனங்கள் தான் பெட்ரோல் - டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஒரு சிக்கலான பிரச்சனை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வரி குறைப்பு குறித்து மத்திய, மாநில
அரசுகள் இணைந்து ஆலோசிக்க வேண்டும்.பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர ஜி.எஸ்.டி கவுன்சில் தான் முடிவு செய்ய வேண்டும். நான் ஒரு மத்திய அமைச்சர் மட்டுமே; என்னால் மட்டும் முடிவு செய்ய முடியாது என்று சென்னையில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

;