tamilnadu

img

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

மழையில் நனைந்த நெல் மூட்டைகள்

கடலூர், மே 5- கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இளங்கானூர் கிராமத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது.  இந்த கொள்முதல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்து வைத்துள்ளனர். நெல் மூட்டைகளுடன் அரசு கொள்முதல் நிலையத்தில் காத்திருந்த நிலையில் திடீர் என  ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையில் 2000 க்கும் அதிகமாக நெல் மூட்டைகள் தார்பாய்கள் போட்டும்  மழையில் நனைந்து நாசமாகின.  அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளுக்கு என பராமரிப்பு குடோன் இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்தன. நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.