புதுச்சேரி, ஜூலை 13- உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநரை உடனே மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுச்சேரி பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குரி மையின் மாண்புகளை கேலிக்கூத் தாக்கி தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று தான்தோன்றித் தனமாக செயல்பட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை வரவேற்கிறோம். 1963 தொடங்கி புதுச்சேரியில் 25 துணை நிலை ஆளுநர்கள் பணி யாற்றியுள்ளனர். இந்த 60 ஆண்டு காலத்தில் மிக மோசமான ஆளுந ராக தற்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டுள் ளார். 2016 ஆம் ஆண்டு இவர் பொறுப் பேற்றது முதல் புதுச்சேரி மக்களுக்கு எதிராகவும், கூட்டாட்சி தத்துவத்தை நாசப்படுத்தும் வகையிலும் செயல்பட்டுள்ளார். ஆளுநர் அலுவ லகத்தை இந்துத்துவ சக்திகளின் கூடாரமாக மாற்றி மதசார்பின் மைக்கு எதிராக செயல்பட்டுள்ளார். பாஜகவின் குதிரை பேரத்திற்கு வலு சேர்க்கும் வகையில் புதுச்சேரியில் 3 பாஜக தலைவர்களுக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை அளித்துள்ளார். நியமன உறுப்பி னர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கினால்தான் நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பேன் என்று கூச்சநாச்சமில்லா மல் கூறினார். தலித் மற்றும் தமிழ் மக்களை இழிவுபடுத்துவதும், மக்கள் அதனை கடுமையாக எதிர்க்கிற போது மன்னிப்புக்கேட்பதும் இவரின் வாடிக்கையாக உள்ளது. எனவே புதுச்சேரி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். மேலும் புதுச்சேரி அரசு ஆளுந ரின் நடவடிக்கைகளை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை உடனடி யாக நடைமுறைப்படுத்த வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறை வேற்றுவதோடு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உரு வாக்கிட அரசு முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.