சென்னை, ஆக.20- தமிழ்நாடு சமூக நலத்துறை பணி யாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர்,மாநில அமைப்பாளர், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு உதவி பொதுச் செய லாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் மாநில ஒருங்கி ணைப்பாளர், ஜாக்டோ-ஜியோ தலைவர் அன்பரசு, தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையில் தேர்வு நிலை கண்காணிப்பாளராக பணி யாற்றி வந்த நிலையில், தன் விருப்ப ஓய்வு பெற்றார். இதையொட்டி, ஞாயிறன்று (ஆக.18) நடைபெற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பணி நிறைவு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு சமூக நலத்துறை பணி யாளர் சங்கத்தின் சார்பில் மாநில நிர்வாகிகள் த. முத்துகுமாரசாமி வேல், பெ.அன்டணி, சு. மலர்விழி, க. துரைசிங், பொறுப்பு தலைவர் த. ரவி, இரா. ரெங்கசாமி, ச.அகஸ்தியன் ஆகியோர் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசுகள் வழங்கினர்.
இதில் அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர்(பொறுப்பு) சா.டானியல் ஜெயசிங், துணை பொதுச் செயலாளர் தெ.வாசுகி, ஜாக்டோ -ஜியோ ஒருங் கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் கு.வெங்கடேசன், மாவட்ட தலைவர் கள் வே. விஜயகுமரன், த.முத்துகுமார சாமிவேல், நா.முருகானந்தம் மற்றும் துறைவாரி சங்கத்தின் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர்.