tamilnadu

img

ஓய்வுபெறும் வயது உயர்வு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 8 - அரசு ஊழியர்கள், ஆசி ரியர்களின் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு எதிர்ப்பு  தெரிவித்து வெள்ளியன்று (மே 8) தமிழகம் முழுவதும்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று பர வலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி மத்திய மாநில அரசுகள் தொழிலா ளர்கள், ஊழியர்களின் உரி மைகளை பறித்து வரு கின்றன. அதன் தொடர்ச்சி யாக அரசு ஊழியர்களின் சரண்டர் விடுப்பை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அகவிலைப்படியை நிறுத்தி  வைத்துள்ளது. ஜிபிஎப் வட்டி  விகிதத்தை குறைத்து விட்டது. அதன் உச்சமாக ஓய்வு பெறும் வயதை ஓராண்டு நீடித்துள்ளது.

அரசின் இந்த நடவ டிக்கைக்கு தமிழ்நாடு அரசு  கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. அரசு ஊழி யர்கள் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59ஆக உயர்த்தியிருப்பது, இளைஞர்களின் வேலை வாய்ப்பை முடக்கும் செயல்.  தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் ஓராண் டிற்கு எந்தவித பணி நியமன நடவடிக்கையினையும் ஈடு பட முடியாது. எனவே, ஓய்வு பெறும் வயதை உயர்த்திய அரசா ணையை திரும்ப பெற வலி யுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலங்கள் முன்பு வெள்ளியன்று (மே 8) ஆர்ப்பாட்டம் நடத்த  அறைகூவல் விடுத்தி ருந்தது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழிலகத்தல் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் நம்பிராஜன், மாவட்டத்தலைவர் டேனி யல் ஜெயசிங், செயலாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் மாவட்டத் தலைவர் வெ. லெனின் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.