வண்டலூர், கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல கட்டுப்பாடு
சென்னை,ஆக.13- ஜி.எஸ்.டி. ரோட்டையும் பழைய மகாபலிபுரம் சாலையையும் இணைக்கும் வகையில் வண்டலூர்-கேளம்பாக்கம் மெயின் ரோடு உள்ளது
வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் கேளம்பாக்கம் சாலை வழி யாக வண்டலூர் வருகின்ற னர். இதனால் போக்கு வரத்து நெரிசலை சமாளிக்க வண்டலூர்,கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகன போக்குவரத்துக்கு காவல் துறையினர்கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
அதன்படி காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயில் தீக்குண்டத்தில் தவறி விழுந்த 2 பேர் படுகாயம்
சென்னை,ஆக.13- அம்மன் கோயில் தீமிதி திருவிழாவின்போது, தீக்குண்டத்தில் தவறி விழுந்த பக்தர்கள் 2 பேர் படு காயம் அடைந்தனர்.
ஆலந்தூரில் உள்ள அம்மன் கோயிலில் குன்றத் தூரை சேர்ந்த அமுதா (42) என்ற பெண் பக்தர் வேண்டு தலை நிறைவேற்ற தீ குண்டத்தில் இறங்கினார். தீக்குண்டத்தில் நடந்து சென்ற அவர் திடீரென கால் இடறி விழுந்ததில் வலது கால் மற்றும் கைப்பகுதி யில் பலத்த தீக்காயம் ஏற் பட்டது. அதே போல் கொளத் தூர் பள்ளி சாலை பகுதி யில் ஸ்ரீதேவி கங்கை அம்மன் கோயிலில் நடை பெற்ற தீமிதி திருவிழாவில் வடக்கு மாட வீதி பகுதியைச் சேர்ந்த வேலு (45) என்ற நபர் தீ மிதித்த போது கால் தவறி நெருப்பில் விழுந்தார். இதில் இடது பக்கம் மார்பு மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டு கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை யில் 21 விழுக்காடு தீக்காயங் களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று மின்தடை
சென்னை, ஆக. 13- வடசென்னையில் புதன் கிழமை (ஆக. 14) ராய புரம், அம்பத்தூர், சோழ வரம், ஆவடி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதி யம் 3 மணி வரை மின் விநி யோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரி