tamilnadu

img

24 மணிநேர மின் தடையை நீக்க மையம் அமைக்க வேண்டும்

 சென்னை, ஆக. 9- புதியதாக விரிவாக்கம் செய்யப் பட்ட மாநகராட்சி பகுதிக்கு 24 மணிநேர மின்  தடை நீக்கமையம் அமைக்க  வேண்டும் என தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பு  சென்னை வடக்கு வட்டக் கிளை  மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வெள்ளியன்று (ஆக 9) பெரம்பூரில் நடைபெற்ற மாநாட்டில் வடக்குத் திட்ட  14வது மாநாட்டை முன்னாள் துணைத் தலைவர் சிறீரா முலு கொடியேற்றி துவக்கி வைத்தார். திட்டத்தலைவர் பி.கதிரேசன் தலைமை  தாங்கினார். தண்டையார் பேட்டை கோட்டம் செய லாளர் டி.சந்திரசேகர் வர வேற்றார். சிஐடியு வட சென்னை மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜி.காசிநாதன் துவக்கவுரையாற்றினார். திட்டச்செயலாளர் ஜி.மதன கோபால் ஆண்டு அறிக்கை யையும் , பொருளாளர் தன சேகரன் வரவு-செலவு அறிக்  கையையும் சமர்பித்தனர். மின்ஊழியர் மத்திய  அமைப்பின் மாநிலத்தலை வர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.  உழைக்கும் பெண்கள் ஒருங்  கிணைப்புக்குழு அமைப்பா ளர் எம்.தனலட்சுமி, மாநில நிர்வாகிகள் டி.ஜெய்சங்கர், எம்.சாலட், வடக்கு மண்ட லச் செயலாளர் ஆர்.ரவிக்கு மார், சென்னை மாவட்ட நிர்  வாகிகள் எஸ்.கண்ணன், எம். முத்து, எம்.வெங்கடேசன், எஸ்.சுந்தரம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப்  பேசினர்.

தீர்மானங்கள்

சென்னை வடக்குத் திட்டத்தில் பணிபுரிகின்ற அனைத்து வகை ஊழியர்க ளுக்கும் முதன்மை பட்டி யல் வழங்கிட வேண்டும், மின்வாரிய நிர்வாகம், நேரடியாக மின் உற்பத்தியில் ஈடுபட்டு மக்களுக்கு தர மானமின்சாரம் வழங்க வேண்டும், புதியபென்சன்  திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த ஊழி யர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், மேற்பார்வை பொறியாளர் அலுவல கத்தில் பணம், வாங்கிக் கொண்டு வேலை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், பொன் னேரி கோட்டத்தில் கல்வித் தகுதி சரிபார்த்தல் ஏற்பட முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பகுதிநேர ஊழி யர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், உழைக்கும்  பெண்கள் ஒருங்கிணைப் புக்குழுவை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை வடக்கு திட்டத் தலைவராக பி.கதிரேசன், செயலாளராக ஜி.சத்தியமூர்த்தி, பொருளா ளராக ஜி.மதனகோபால் உள்ளிட்ட 23 பேர் கொண்ட திட்டக்குழு தேர்வு செய்யப் பட்டனர்.