tamilnadu

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளுடன் மக்கள் வாக்குவாதம்

அம்பத்தூர், ஜூலை 29- திருவேற்காடு கூவம் ஆற்றையொட்டிய குடியிருப்புகளை அகற்றுவதற்கு திங்கட்கிழமை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனால் அதிகாரிகளுடன் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் ஆற்றையொட்டி மேடான  பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி அகற்றுவதற்காக வரு வாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுத்து வரு கின்றனர்.

ஏற்கெனவே கணக்கெடுத்த 6 வீடுகளை அகற்ற வேண்டும் என அதிகாரிகள் கூறினர். ஆனால் அதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து அதிகாரிகள் அங்கிருந்து பணியை கைவிட்டு புறப்பட்டு சென்றனர்.