ஓசூர் மாநகராட்சியில் குப்பை வரி உயர்வுக்கு குடியிருப்போர் வணிகர்கள் கடும் எதிர்ப்பு
கிருஷ்ணகிரி, ஏப்.29- ஓசூர் மாநகராட்சியில் குப்பை வரியை 10 மடங்கு உயர்த்தியதுடன் 2017 முதல் இன்று வரை தண்ட வசூல் போல் வசூ லிப்பதை,வரி உயர்வை,கடைகளுக்கு சீல் வைப்பதை கைவிட வேண்டும், அடிப்படை,சுகாதார வசதிகள்,கழிவு நீர் கால்வாய்கள்,சாலை,பொதுக் கழிப்பறை, அரசு நிலங்கள் பெரிய கால்வாய் ஆக்கிர மிப்பு, நடைபாதை ஆக்கிரமிப்புகளை சீர்படுத்தாமல் வீட்டு வரியையும்,வணிக நிறுவனங்களின் வரியையும் 10 மடங்கிற்கு மேல் உயர்த்தி வசூலிப்பதையும், பழைய வரி என்று கூறி மாநகராட்சிக்கு முன்பி ருந்த பழைய வரிக்கும் இப்போது கூடுதல் கட்டணமாக வசூலிப்பதையும் கைவிட வேண்டும் என தொடர்ந்து ஓசூர் அனைத்து வணிகர்கள் சங்கம், அனைத்து குடியிருப்போர் நல சங்கங்க ளின் கூட்டமைப்பு,அனைத்து கல்வி நிறு வனங்கள்,அனைத்து மருத்துவ நிறு வனங்கள் சங்கங்கள் தொழிற்சாலை சங்கங்கள், திருமண மண்டபங்களின் சங்கங்கள் இணைந்த "நம்ம ஓசூர்" கூட்ட மைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுவரையும் சிறிதும் இது குறித்து கண்டுகொள்ளாமல் கடுமையான வரிகளை உயர்த்தி வசூலிப்பதை கண்டித்தும் வரி உயர்வை கைவிடக்கோரியும், தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாக இன்று மாலை நம்ம ஓசூர் கூட்டமைப்பு சார்பில் வாயில் கருப்பு முகமூடி அணிந்தும், 3500 வணிக நிறுவனங்களில் கருப்புக் கொடி ஏற்றியும், 38 சங்கங்கள் இணைந்து கடும் வரியேற்றம், 2017 முதல் இன்று வரை ஏற்றப்பட்டுள்ள வரி, தண்டவசூல், ஆகியவற்றை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். நம்ம ஓசூர் கூட்டமைப்பின் குடியிருப் போர் நல சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் துரை தலைமையில்,வணிகர்கள் சங்க முன்னாள் தலைவர் தாமஸ், செய லாளர் மாரிமுத்து,புஷ்பா பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரின்ஸ் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் செயலாளர் ஸ்ரீனி வாசலூர் துணைத்தலைவர் வெங்கடேஷ், நிர்வாகிகள் சதீஷ், சரவணன்,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உடனடியாக 10 மடங்கு கடும் வரி ஏற்றத்தையும் 2017 முதல் வரி வசூலிப்பதையும் மாநக ராட்சி நிர்வாகம் நிறுத்தாவிட்டால் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒட்டுமொத்த ஓசூர் மக்களை திரட்டி மாநகரே ஸ்தம்பிக்கச் செய்யும் கடை யடைப்பு போராட்டம்,மறியல் உட்பட நடத்தப்படும் என நிர்வாகிகள் கூறினர்.
தேனீ வளர்ப்புக்கு 40 விழுக்காடு மானியம்
விழுப்புரம், ஏப். 29- குறைந்த முதலீட்டில் அதிக வரு மானம் பெறும் தேனீ வளர்ப்பு தொழிலுக்கு 40 விழுக்காடு மானியத்தில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தோட்டக் கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது. தோட்டக்கலைத்துறையில் தேசிய தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் மூலம் தேனீ பெட்டி ரூ.800, தேனீ கூடு ரூ.800 மற்றும் தேன் பிழியும் கருவி ரூ.8 ஆயிரம் என்றும் 40 விழுக்காடு மானியத்தில் விவசாயி களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற தங்களுக்கு அருகில் உள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.