சிதம்பரத்தில் குடியிருப்போர் ஆலோசனை கூட்டம்
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் சிதம்பரம் அனைத்து குடியி ருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் என்.கலியமூர்த்தி, கே.என் பன்னீர்செல்வம், ஆர். ராகவேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் கடலூர் அனைத்து குடி யிருப்போர் நலச்சங்கங்களின் கூட்ட மைப்பின் மாவட்ட தலைவர் வி.முத்து வேல் சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், கடலூர் குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலு. பச்சை யப்பன், பொதுச் செயலாளர் பி. வெங்கடேசன், பொருளாளர் கே. வெங்கட்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிர்வாகிகள் தேர்வு கூட்டமைப்பு தலைவராக கே.என் பன்னீர்செல்வம்(ரோடு சரஸ்வதி நகர்), செயலாளராக என்.கலியமூர்த்தி (மீனவர் காலனி), பொருளாளராக ஆர்.ராகவேந்திரன் (முத்தையா நகர்) உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நகர்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினம்
பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் 24 வது அமைப்பு தினத்தையொட்டி கொடி ஏற்றத்துடன் முப்பெரும் விழா புதுச்சேரி மாவட்ட சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.கண்ணம்மாள் தலை மையில் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் எம். சண்முகசுந்தரம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதாசுந்தரராமன், ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் வி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் ஊழியர் சங்கங்களின் கன்வீனர் ஏ.சுப்பிரமணியன்,மாவட்ட அமைப்புச் செயலர் கலாராணி, பொருளாளர் ரேவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.