சென்னை, ஜூலை 9- சட்டப் பேரவையில் செவ்வாயன்று (ஜூலை 9) கேள்வி நேரத்தின் போது, உத்திரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.சுந்தர், கலியம்பேட்டை மற்றும் கம்மாளம்பூண்டி ஆகிய பகுதிகளில் கால்நடை மருந்தகங்கள் அமைக்க அரசு ஆவன செய்யுமா என கேள்வியை எழுப்பினார். இதற்கு பதிலளித்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்டம், கலியப்பேட்டை, கம்மாளம்பூண்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கால்நடை அலகுகள் 5 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது. மேற்கண்ட பகுதி களில் கால்நடை மருத்தகம் அமைக்க சாத்திய கூறுகள் இல்லை. கால்நடை அலகுகள் 3 ஆயிரத்திற்கும் மேல் உள்ளதால் அங்கு கால்நடை கிளை நிலையம் அமைக்க சாத்தியக் கூறு கள் உள்ளது. எனவே கம்மாளம்பூண்டி கிராமத்தில் கால்நடை கிளை நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.