tamilnadu

img

நெல் கொள் முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

சிதம்பரம், ஜன.31- சிதம்பரம் சாராட்சியர் விசுமகாஜனை சந்தித்த  சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர்  மாரியப்பன் தலைமையி லான குழுவினர், குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சி.  தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சியில் ஓமகுளம் பழைய அரசு துவக்கப்பள்ளி  அருகே கடந்த ஆண்டு தமி ழக அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இத னால் இப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் பயன டைந்தனர்.  மேலும் 20க்கும் மேற் பட்ட சுமை தூக்கும் தொழி லாளர்கள் வேலை கிடைத்து  பயனடைந்தனர். ஆனால் தற்போது இந்த ஆண்டு அறு வடை முடிந்து நெல் பயி ரிட்ட விவசாயிகள் மற்றும்  தொழிலாளர்கள் நெல் கொள்முதல் நிலையம் அந்த இடத்தில் திறக்கப்  படாததால் பல்வேறு வகை யில் பாதிப்படைந்துள்ளனர். ஆகவே கடந்தாண்டு செயல்பட்ட அதே இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தி ருந்தார். தமிழ்நாடு விவசாய சங்க  நிர்வாகிகள் ராஜா, வாஞ்சி நாதன் உள்ளிட்ட 10க்கும்  மேற்பட்டவர்கள்  உடனி ருந்தனர்.

;