tamilnadu

கோரைப்பாய் நெசவாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

கோரைப்பாய் நெசவாளிகளுக்கு
வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஏப்.10- கோரைப்பாய் நெசவு செய்து வரும் சிறுபான்மை முஸ்லீம் குடும்பத்தினருக்கு  வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, ஆரணி நாடாளுமன்ற உறுப்பி னரிடம்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம்,  காரம் ஊராட்சி,  மலையிட்டான்குப்பம் பகுதியில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நகரில்,   கோரைப்பாய் நெசவு செய்யும் சிறு பான்மையின தொழிலாளர் கள் வீடு கட்டி வசித்து வரு கின்றனர்.  இவர்களுக்கு மத்திய அரசின் பிஎம்ஏஒய் திட்டத்திலும்,  மாநில அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திலும் வீடு கட்ட ஒதுக்கீடு செய்யப்  பட்டுள்ளது. ஆனால், அவர்களிடம் வீட்டுமனை பட்டா இல்லாத கார ணத்தால் வீடு கட்டமுடியா மல் தவித்து வருகின்றனார்.  பட்டா கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறை யிட்டும், எவ்வித நட வடிக்கை இல்லை. இத னால்  ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணி வேந்தனை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  வந்தவாசி வட்ட செய லாளர் அப்துல்காதர் தலை மையில், மாவட்டக்குழு உறுப்பினர் யாசர் அராபத்,  வட்டக்குழு உறுப்பி னர் சுகுமார் மற்றும் பய னாளிகள் உடன் இருந்தனர்.